இமயமலையில் தனியாக கெத்தாக பைக் ஓட்டும் நடிகர் அஜித்.! வைரலாகும் வீடியோ..

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது மேலும் நடிகர் அஜித் திரைப்படங்களில் நடிப்பதை தாண்டி மற்ற நேரங்களில் பைக் ஓட்டுவது, பைக்கில் பல்லாயிரம் கிலோமீட்டர் தனியாக பயணம் செய்து ஏராளமான இடங்களில் சுற்றுலா செல்வது, கார் ரேஸில் கலந்து கொள்வது, துப்பாக்கிச்சூடும் போட்டிகளில் கலந்து கொள்வது, ரிமோட் மூலம் இயங்கும் குட்டி விமானங்களை புதிதாக தயாரித்து அதனை இயக்குவது என அறிவியல் சம்பந்தமான பலவற்றிலும் மிகவும் ஆர்வம் உடையவராக திகழ்கிறார்.

இவருக்கு திரைப்படங்களை நடிப்பதை தாண்டி நேரம் கிடைக்கும்போது எல்லாம் தன்னுடைய பைக்கை எடுத்துக்கொண்டு பயணம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு தனியாக தன்னுடைய பைக்கில் பயணம் மேற்கொண்டு இருந்தார் அந்த வகையில் அஜீத் இந்தியா பாகிஸ்தான் எல்லை வரை சென்றிருந்தார்.

அவ்வப்பொழுது இந்திய ராணுவ வீரர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையதளத்தில் வைரலானது. இந்நிலையில் அவ்வப்பொழுது ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பாலைவனத்தில் பைக்கை நிழலில் நிறுத்திவிட்டு அவர் மணலில் அமர்ந்திருக்கும் பொழுது எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களும் வைரலானது.

இப்படிப்பட்ட நிலையில் மீண்டும் தன்னுடைய சில நண்பர்களுடன் இமய மலைப் பகுதியில் பைக்கில் பயணம் செய்து உள்ளார். இது குறித்த புகைப்படங்கள் ஏற்கனவே வெளியான நிலையில் தற்பொழுது அவர் பைக் ஓட்டும் பொழுது எடுத்துக்கொண்ட வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது.

இவ்வாறு நடிகர் அஜித் பிசியாக இருந்து வரும் நிலையில் கடைசியாக இவருடைய நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது. இதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடித்த வருகிறார். இந்த படப்பிடிப்பு முடிந்தவுடன் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருக்கும் படத்தில் இணைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நான் பிரதமர் மோடியின் ஆதரவாளர் என ஓப்பனாக பேசிய நடிகை சமந்தா.! வைரலாகும் வீடியோ..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வரும் நடிகை சமந்தா சமீபத்தில் பிரதமர் மோடிக்கு ஆதரவளிக்கும் வகையில் பேசிவுள்ள வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்பொழுது யசோதா, சகுந்தலம், குஷி, அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆஃப் லவ் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் யசோதா, சகுந்தலாம் ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் விரைவில் வெளியாக தயாராக இருக்கிறது.மேலும் குஷி என்ற படம் தெலுங்கில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குஷி திரைப்படத்தினை ஷிவ நிறுவாணா இயக்குகிறார்.மேலும் இந்த படத்தில் விஜய் தேவரகொண்டானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நடிகை சமந்தா.

இந்த படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வருகின்ற டிசம்பர் மாதம் கிறிஸ்மஸ் அன்று வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதனைத் தொடர்ந்து ஹிந்தியில் வெப் சீரியல் ஒன்றிலும் நடித்து வருகிறார் நடிகை சமந்தா இவ்வாறு தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை சமந்தா சில படங்களின் வாய்ப்பை இழந்து உள்ளதாக கூறப்படுகிறது.

ஏனென்றால் இவர் சமீபத்தில் தன்னுடைய சம்பளத்தை அதிக அளவில் உயர்த்தி உள்ளார். இதன் காரணமாக ஒரே மாதத்தில் தமிழில் ஒரு படத்திலும் தெலுங்கில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக நடித்திருந்த திரைப்படத்திலிருந்தும் விலகி உள்ளார். இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் நடிகை சமந்தா மோடியின் ஆதரவாளர் என பேசியுள்ள வீடியோ ஒன்றிய இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அதில் அவர் கூறியதாவது நான் எப்பொழுதுமே மோடி ஜி அவர்களின் ஆதரவாளர் என கூறியுள்ளார் மேலும் அவரின் செயல்பாடுகள் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் மோடி அவர்களால் நம்முடைய நாட்டில் பல மாற்றங்களை சந்தித்துள்ளது எனவும் பல விஷயங்கள் நாட்டை முன்னோக்கி நகர்த்துகிறது எனவும் நம்புவதாக கூறியுள்ளார் இவ்வாறு வெளிப்படையாக இவர் கூறியதால் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

Exit mobile version