அப்பனை ஓரம் கட்டும் மகன் செழியன்.! சிக்கலில் மாட்டிக் கொண்டு தவிக்கும் பாக்யா..

விஜய் டிவியில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாக்யலட்சுமி. இந்த சீரியலில் தற்பொழுது கோபி வீட்டை விட்டு வெளியேறி உள்ள நிலையில் ராதிகாவை திருமணம் செய்து கொள்வதற்காக பல முயற்சிகளை செய்து வருகிறார்.மேலும் இனியா ஸ்கூல் பீஸ் கட்டாம நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன் என கூற எழில் இனியாவை திட்ட பிறகு ஈஸ்வரி எழிலை திட்டுகிறார்.

இதனால் பெரிய பிரச்சனை ஏற்படுகிறது அதன் பிறகு கோபியின் அப்பா சத்தம் போட அனைவரும் அமைதியாகி விடுகிறார்கள் .இப்படிப்பட்ட நிலையில் ஈபி பில் கணக்கெடுக்கும் ஆள் வருகிறார் அவர் 17,000 கரண்ட் பில் வந்திருப்பதாக கூற பாக்யா அதிர்ச்சி அடைகிறார் உடனே ஈஸ்வரி கோபி இருந்திருந்தால் இதையெல்லாம் அவனைப் பார்த்திருப்பான் மீண்டும் பிரச்சினை வருகிறது இதன் காரணமாக ஈஸ்வரி மற்றும் செழியன் இருவரும் சேர்ந்து கொண்டு பாக்யாவை குற்றம் சொல்ல ஆரம்பிக்கிறார்கள் மேலும் இதனால் எழில் அவர்களை எதிர்த்து பேசுகிறார்.

இந்த நிலையில் கோபியின் அப்பா சத்தம் போட்டு அனைவரையும் அமைதியாக இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் ஈஸ்வரி மேலும் பாக்யாவை திட்டி வருவதால் பாக்கியம் எல்லாத்துக்கும் பணம் தான் காரணம் பணம் இருந்தால் அனைத்து பிரச்சினைகளையும் சரி செய்து விடலாம் என செல்வியிடம் உறுதியாக பேசுகிறார். கண்டிப்பாக பிசினஸை பெருசாக்க வேண்டும் என முடிவெடுக்கிறார்.

பிறகு செழியனின் ரூமுக்குள் சென்று நீ பண்ணது சரியா என கேட்க நான் பண்ணது சரிதான் இப்பொழுது இதையெல்லாம் யார் பாப்பா என பேச ஜெனி நீ போய் கரண்ட் பில் கட்டு என சொல்கிறார். அதற்கு செழியன் வழக்கம்போல் கொடுக்கிற காசை மட்டும் தான் கொடுப்பேன் அதற்கு அதிகமாக கொடுக்க மாட்டேன் எனக் கூற செழியன் விடாப்பிடியாக இருப்பதால் ஜெனி அதிர்ச்சி அடைகிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

Leave a Comment

Exit mobile version