இந்த நேரத்துல அவர்தான் அள்ளி கொடுப்பார்.. பிரபல நடிகரை நினைவு கூறும் சென்னை மக்கள்

சினிமா உலகில் பேரையும் புகழையும் சம்பாதித்த  நடிகர், நடிகைகள் தான் குடும்பம் உண்டு தான் உண்டு என இருக்கிறார்கள் ஆனால் ஒரு சில நடிகர்கள் அதை மீறி பலருக்கும் உதவிகள் செய்கின்றார்கள் அதுவும் குறிப்பாக ஆபத்து காலங்களில் தானாக வந்து உதவி செய்கிறார்கள்.

அப்படி தற்பொழுது  சென்னையை உலுக்கிய மிக்ஜாம் புயலால் பல்வேறு இடங்களில் வீடுகளில் தண்ணீர் புகுந்து மக்கள் வேதனைக்கு உள்ளானார்கள் இதனை அறிந்த சினிமா பிரபலங்கள் பலரும் சென்று உணவு, பால் பாக்கெட், தன்னால் முடிந்த காசுகளை கொடுத்து மக்களுக்கு சேவை செய்து வருகின்றனர்.

வீட்டை விட்டு வெளியே போக சொன்ன ஜனனி.. லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்ட குணசேகரன்.. எதிர்நீச்சல் பரபரப்பான ப்ரோமோ

குறிப்பாக கே பி ஒய் பாலா  200 பேருக்கு ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தார். சூர்யா, கார்த்தி போன்றவர்கள் காசோலைகளை விஜயின் மக்கள் இயக்கம் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் மற்றும் உணவுகளை கொடுத்து அசத்தினர். அஜித் மறைமுகமாக உதவி செய்தார்.

இந்த நேரத்தில் சாலிகிராம் மக்கள் நாங்கள் மயில் சாமியை ரொம்ப மிஸ் பண்ணிக்கிறோம் அவர் இது போன்ற நேரத்தில் இருந்திருந்தால் எங்களுக்கு அவர் அள்ளி கொடுத்திருப்பார். எந்த ஒரு பிரச்சனையும் வராது என நினைவு கூர்ந்து வருகின்றனர் 2015 ஆம் ஆண்டு இதேபோல மக்கள் தண்ணீரில் மூழ்கிய அவதிப்பட்ட போது மயில்சாமி சாலிகிராமம் மற்றும் அதை சுற்றி இருக்கும் பகுதிகளுக்கு சாப்பாடு கொடுத்தார்.

ஆண்களுக்கு அந்த மாதிரியான பெண்களைத் தான் ரொம்ப பிடிக்கும்.. நடிகை கஸ்தூரி போட்ட பதிவு

மேலும் தன்னால் முடிந்த காசுகளை கொடுத்து உதவி செய்தார்.  சாலிகிராமத்தில் பல இடங்களில் அவர் மர கன்றுகள் வைத்தார் அது மரமாக இப்பொழுது உதவுகிறது மேலும் கோயில்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளையும் அவர் செய்திருக்கிறார். அவர் இந்த சமயத்தில் நாங்கள் ரொம்ப மிஸ் செய்கிறோம் என  மக்கள் கூறினார்.