எந்த கொடியும், ஸ்டிக்கரும் பயன்படுத்தாமல் மக்களுக்கு உதவி செய்த நடிகர்.. புகழ்ந்து தள்ளிய பயில்வான்

Ranganathan : மிக்ஜாம் புயலால் சென்னை அதை சுற்றி இருக்கும் மாவட்டங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது இதனால் மக்கள் தன்னுடைய வீட்டையும் பொருளையும் இழந்து ஒரு வேளை சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டப்பட்டனர். அரசு ஒரு பக்கம் முன்னேற்பாடு செய்ய மறுபக்கம் திரை பிரபலங்கள் சமூக ஆர்வலர்கள் பலரும் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவினர்.

அந்த வகையில் விஜய் டிவி பிரபலம் கே பி ஒய் பாலா  அரிசி மூட்டை மற்றும் 200 பேருக்கு ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து அசத்தினார் அவரை தொடர்ந்து நடிகர் ஆதி சாப்பாடு வழங்கினார் கலா மாஸ்டர்  பால் பாக்கெட் வழங்கினார் இதுபோல பல நடிகர்களும் அவருடைய ரசிகர்களும் உணவுகளை கொடுத்தனர்.

பிறந்த வீட்டு கஷ்டத்தை போக்க மண் மிதித்து வேலை செய்த மகா.. அதை வீடியோ எடுத்த கௌதம், சித்ராதேவி – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

விஜய் தன்னுடைய மக்கள் இயக்கத்தின் மூலம்  பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று மக்களுக்கு சாப்பாடு தன்னால் முடிந்த காசுகளை கொடுத்து உதவி செய்தார். அஜித் அமீர்கான்,  விஷ்ணு விஷால் போன்ற நடிகர்களுக்கு மட்டுமே உதவி செய்தார் ஏழைகளை கைவிட்டு விட்டார் சுத்தமாக உதவி செய்யவில்லை என சோசியல் மீடியாவில் பூதாகரமாக வெடித்தது.

இந்த நிலையில் பயில்வான் ரங்கநாதன் அஜித் செய்த உதவி குறித்து பேசி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. 100 பேரை வீட்டில் தங்க வைத்து மூன்று நாட்கள் சாப்பாடு போட்டு அவர்கள் வீட்டுக்கு செல்லும்பொழுது ஒவ்வொருவருக்கும் சுமார் 10,000 வழங்கியுள்ளார்.

கைதி 2 10 நிமிட வீடியோ.. லோகேஷ் எடுத்த அதிரடி முடிவு.. எல்லாம் வசூலுக்காக தான்..

எந்த ஒரு கொடியும், ஸ்டிக்கரும் இல்லாமல் அஜித் இதனை சைலண்டாக செய்து இருக்கிறார் என அஜித்தை பற்றி பெருமையாக பேசியுள்ளார் பயில்வான் ரங்கநாதன். இந்த தகவல் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.