புயல் நிவாரண உதவிக்காக அஜித் எவ்வளவு கொடுத்தார் தெரியுமா? விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபலம்..

Actor Ajith Kumar: சென்னை மற்றும் சுற்றியுள்ள சில மாவட்டங்களில் நிற்காத மழையின் காரணமாக வெள்ளம் சூழ்ந்து உள்ளது. எனவே இதில் மாட்டிக் கொண்டு ஆயிரம் கணக்கான மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதிலிருந்து மக்களை மீட்க பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வரும் நிலையில் நடிகர் அஜித் எவ்வளவு நிதி உதவி செய்துள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி கனமழை காரணமாக சென்னையில் இருக்கும் அஜித் எந்த ஒரு உதவியும் செய்யவில்லை என சோசியல் மீடியாவில் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வந்தார்கள். மேலும் காரப்பாக்கத்தில் ஏற்பட்ட கனமழை புயல் காரணமாக நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் வெள்ளத்தில் சிக்கினார். இந்நிலையில் அவர்களுக்கு தகுந்த போக்குவரத்து உதவிகளை செய்தது அஜித் தான் என்றும் அவருக்கு தனது மனமார்ந்த நன்றிகள் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் விஷ்ணு விஷால் பதிவுவை வெளியிட்டு இருந்தார்.

தம்மு, தண்ணி அடிக்கிற பழக்கம் அர்ச்சனாவுக்கு இருக்கு.. நீ பெரிய யோக்கியமா? ரசிகர்கள் ஆவேசம்

மேலும் அஜித்துடன் இருக்கும் புகைப்படமும் வைரலானது. பாலிவுட் நடிகர் அமீர்கான் அவர்களையும் அஜித் பத்திரமாக தகுந்த உதவிகளுடன் மீட்டெடுத்தார் எனவே இந்த உதவிகள் எல்லாம் அவர்களுக்கு மட்டும்தான் ஏழை மக்களுக்கு கிடையாதா என கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த சூழலில் சமீப பேட்டியில் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் இந்தியாவையே உலுக்கிய கஜா புயலால் பல ஊர்கள் நாசம் அடைந்தது அப்பொழுது ஏராளமான பிரபலங்கள் முன்வந்து நிவாரண நிதி தந்தனர். கடைசியாக முதல்வர் அறிக்கை ஒன்று வெளிவர அதில் நடிகர் அஜித்குமார் 15 லட்சம் என குறிப்பிடப்பட்டிருந்ததாம். இவ்வாறு எந்த ஒரு பப்ளிசிட்டியும் செய்யாமல் பல உதவிகளை யாருக்கும் தெரியாமல் அஜித் இன்றளவும் செய்து கொண்டிருக்கிறார் என கூறியுள்ளார்.

விஜயகாந்த் வெள்ளந்தியான மனுசன்.. ரொம்ப மிஸ் பண்றேன் – எமோஷனலாக பேசிய ஆனந்தராஜ்

அப்படிதான் தற்பொழுது திரை பிரபலங்கள் கூட மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அஜித் உதவி செய்யவில்லை என விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் யாருக்கும் தெரியாமல் அஜித் உதவி செய்துதான் வருகிறாராம்.