என்னால ஒரு ரசிகர் கூட பாதிக்க கூடாது.? சென்னையில் ஷூட்டிங்கை நிறுத்தி வைக்கும் அஜித்.!

Ajith : தமிழ் சினிமாவில் படிப்படியாக முன்னேறி இன்று உச்சத்தை அடைந்துள்ளவர் நடிகர் அஜித்குமார். இவர் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகிறார் அந்த படமும்  சமூக அக்கறை கலந்த படமாக இருப்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அப்படி துணிவு திரைப்படத்தின் வெற்றி தொடர்ந்து விடாமுயற்சி படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் வெளிநாட்டில் போய்க்கொண்டிருக்கிறது அடுத்தடுத்த சூட்டிங் துபாய், அபுதாபியில் இருக்கும் என தெரிய வருகிறது. விடாமுயற்சி திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் த்ரில்லர் கலந்த படமாக உருவாக்கி வருகிறதாம். இதில் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

போலீஸ் மேல் காரை ஏத்திய மகா.. பதறி அடித்துக் கொண்டு ஸ்டேஷனுக்கு வந்த சூர்யா – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

அண்மையில் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும் வெளிவந்து வைரலாகின. இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் படத்தின் ஷூட்டிங் ஏன் சென்னையில் நடத்த படுவதில்லை என்பது குறித்து நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு அஜித்தின் ஷூட்டிங் சென்னையில் பிரபல ஸ்டுடியோவில் நடைபெற்றுக் கொண்டிருந்ததாம்..

அப்பொழுது ரசிகர் ஒருவர் அந்த தடுப்பு சுவரின் மேலே ஏறி நடிகர் அஜித்தை பார்க்க அனுமதிக்க வில்லை என்றால் கழுத்தை அறுத்துக் கொள்வேன் என கத்தியுடன் நின்று இருக்கிறார் இதை பார்க்க நடிகர் அஜித்தும் அதிர்ச்சியாகிவிட்டாராம்.. அதன் பிறகு தான் அஜித்..

புடவையை சரிய விட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைத்த சமந்தா.! வைரல் ஹாட் கிளிக்..

ஷூட்டிங் சென்னையில் இருக்க கூடாது என முடிவெடுத்து ஹைதராபாத் அல்லது வெளிநாடுகளில் படபிடிப்பு எடுக்க ஓகே சொல்கிறாராம் இதனை ஸ்டண்ட் குரூப்பில் இருக்கும் ஒருவர் கூறியிருக்கிறார். தன்னால் ஒருவர் கூட பாதிக்கப்பட கூடாது என அஜித் இப்படி ஒரு முடிவு எடுத்து உள்ளது ரசிகர்கள் மத்தியில் கைத்தட்டல் வாங்கி வருகிறது.