வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சைலண்டாக உதவி செய்த அஜித்.. வாழ்த்தும் ரசிகர்கள்

Michaung Cyclone: மிக்ஜாம் புயலால் ஆயிரம் கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கி அவதிப்பட்டு வரும் நிலையில் திரை பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்பொழுது நடிகர் அஜித் உதவி செய்திருக்கும் நிலையில் அது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை மக்கள் மக்ஜாம் புயலால் கடுமையான பாதிப்பில் சிக்கி உள்ளனர். தங்க உணவு இல்லாமல் தண்ணீரில் இல்லாமல் இருக்க இடம் இல்லாமல் அவதிப்பட்டு வரும் நிலையில் திரை பிரபலங்கள், அரசு, தனியார் நிறுவனங்கள் பொதுமக்கள் என பலரும் இரவு பகல் பார்க்காமல் உதவிகளை செய்து வருகிறார்கள்.

ரஜினியின் கோபத்தால் விஜயகாந்துக்கு அடித்த அதிர்ஷ்டம்.. இதுக்கு பேரு தான் தெய்வம் கூரையை பிச்சிட்டு கொடுக்கிறதா.?

அந்த வகையில் நடிகர் சூர்யா, கார்த்தி, ஹரிஷ் கல்யாண் நிதி உதவி செய்தனர். மேலும் நடிகர் விஜய் தனது ரசிகர்கள் அனைவரும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார். நடிகர் பார்த்திபன் ரோட்டில் இறங்கி உணவுகள் வழங்கி உதவி செய்து வருகிறார். மேலும் சின்னத்திரை பிரபலங்களான பாலா பாதிக்கப்பட்ட மக்களின் இடத்திற்கே சென்று ஒரு குடும்பத்திற்கு தலா ஆயிரம் ரூபாய் என 200 குடும்பத்திற்கு கொடுத்துள்ளார்.

அதேபோல் அறந்தாங்கி நிஷாவும் பலருக்கும் உணவுகள் வழங்கி வருகிறார். இவ்வாறு சின்னத்திரை பிரபலங்கள் முதல் வெள்ளித்திரை பிரபலங்கள் வரை அனைவரும் உதவிகளை செய்து வரும் நிலையில் நடிகர் அஜித் இதுவரையிலும் ஒரு உதவி கூட செய்யவில்லை என பலரும் கமெண்ட் செய்து வந்தனர்.

மிக்ஜாம் புயலில் சிக்கித் தவித்த எதிர்நீச்சல் சீரியல் நடிகை.! உடனே நடவடிக்கை எடுத்த மீட்பு குழுவினர்..

ஆனால் அஜித் சைலண்டாக தனது நண்பர்கள் மூலம் மக்களுக்கு உதவி செய்து வருகிறாராம். இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக பொதுவாக நடிகர் அஜித் தான் செய்யும் எந்த உதவியும் வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார் எனவே தான் யாருக்கும் தெரியாமல் இவ்வாறு உதவி செய்து வருவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.