நடிப்பின் மீது ஆர்வம் இல்லாதவர் அஜித்.. சூர்யா கேரியர் கிளோஸ் – விளாசிய பிரபல நடிகர்

Ajith : நடிகர் அஜித்குமாரும் சரி, சூர்யாவும்  சரி சினிமா உலகில் தவிர்க்க முடியாத பிரபலங்கள்.. இருவருமே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருவதோடு மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையில் பல உதவிகளை செய்து அசத்துகின்றனர்.  அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்றது.

அதை தொடர்ந்து விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது மறுபக்கம் சூர்யா விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் மிரட்டினார் அதனை தொடர்ந்து கங்குவா படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

சூர்யாவை எதிர்த்து பேசி மகாவிடம் வாங்கி கட்டிக் கொண்ட ஐஸ்வர்யா மிரண்டு போன குடும்பம் – ஆஹா கல்யாணம் ப்ரோமோ

இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருக்கிறது வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படிப்பட்ட அஜித், சூர்யாவைப் பற்றி குணச்சித்திர நடிகர் பப்லு என்கின்ற பிரித்திவிராஜ் பழைய பேட்டி ஒன்றில் விமர்சித்துள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. அஜித் ரொம்பவே தன்மையான மனிதர் ஆனால் அவருக்கு நடிப்பில் மீது ஆர்வமே இல்லை.

அதுக்கு அர்ப்பணிப்பே இல்லாதவர் ஆனால் லக்காக அவருக்கு அது தானாக நடக்கிறது நான் எல்லாம் ஷார்ட் ரெடி என்றால் சந்தோஷமாக வரேன் என்பேன் அவரோ வந்து தொலைகிறேன் என்பார் சூர்யா பயங்கரமான ஆள் தனக்கென்று மட்டும் தான் யோசிப்பார் ஆனால் ரொம்ப நல்ல நடிகர் இருந்தும் அவரின் சினிமா கேரியர் முடிந்து விட்டதாக நினைக்கிறேன் என கூறி இருந்துள்ளார் அந்த வீடியோ பழசாக இருந்தாலும் தற்போது வைரல் ஆகி வருகிறது.

வீட்டுக்கு வந்த முதல் நாளே.. ஸ்ருதி செய்யும் வேலையை பார்த்து ஷாக்கான விஜயா – சிறகடிக்க ஆசை ப்ரோமோ

இப்படி அஜித், சூர்யாவைப் பற்றி பேசுவது ரொம்ப தப்பு அவருடைய வளர்ச்சி எட்டாத இடத்தில் இருக்கிறது மக்கள் சும்மா எல்லாம் நடிகர்களை புகழ்ந்து தள்ள மாட்டார்கள் அவர்களுடைய திறமையால்தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார்கள் என கூறி கமெண்ட் எடுத்து வருகின்றனர்.