துணிவு படத்தை விட பவர்ஃபுல்லான கதையில் நடிக்கும் அஜித்.! சொன்னது யார் தெரியுமா.? குஷியில் ரசிகர்கள்

Ajith : முன்னணி நடிகர்கள் கேப்பே விடாமல் படங்களில் நடித்து தன்னுடைய மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்திக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர் ஆனால் அஜித் மட்டும் அதற்கு எதிர் மாறாக இருக்கிறார். ஒரு படத்தில் நடித்து விட்டால் சிறு இடைவெளி எடுத்துக் கொள்வது வழக்கம்.

அந்த நேரத்தில் தனக்கான ஆசையை அவர் நிறைவேற்றிக் கொள்கிறார் கார் ஓட்டுதல், ட்ரோன் இயக்குதல், துப்பாக்கி சுடுதல் என பலவற்றிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார் அப்படி துணிவு திரைப்படத்தை தொடர்ந்து விடாமுயற்சி படத்தில் நடிப்பதாக தகவல்கள் எல்லாம் வெளியாகின.

மேட்ச் பாக்க போன அன்னாச்சி பட நடிகைக்கு நடந்த சோகம்.! அடேய் என் செல்லத்தை இப்படி ஆக்கி விட்டுட்டீங்களேடா

ஆனால் அஜித் பைக் ரைடு போனார் இதனால் விடாமுயற்சி தொடங்காமலேயே இருந்தது.  ஆறு மாதங்களுக்குப் பிறகு இப்பொழுது தான் ஷூட்டிங் எடுக்கப்பட்டு வருகிறது. நேற்று விடாமுயற்சி படத்தின் கலை இயக்குனர் மிலன் இயற்கை எய்தினார். சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

வர முடியாதவர்கள் சமூக வலைத்தளப் பக்கங்களில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இதனால் விடாமுயற்சி ஷூட்டிங் சற்று தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் முக்கிய பத்திரிக்கையாளர் கே. என். சுந்தர் என்பவர் விடாமுயற்சி குறித்து பேசியது வைரலாகி வருகிறது.

கோபி தலையில் இடியை இறக்கிய ராதிகா.! கத்தி மேல் நடப்பது போல் அடுத்த பிரச்சனையில் சிக்கிய பாக்கியா – பாக்கியலட்சுமி

அவரிடம் விடாமுயற்சி படத்தின் ஹீரோ, இயக்குனர், தயாரிப்பு என அனைத்தும் அதிகாரப்பூர்வமாக சொன்னாலும் சூட்டிங் மட்டும் ஏன் இவ்வளவு தாமதமாக தொடங்கியுள்ளது என்பது குறித்து கேள்வி எழுப்பினர் அதற்கு பதில் அளித்த சுந்தர்..மகிழ் திருமேனி ஒரு கதையை எழுதி எடுத்து வந்தார்.

ஸ்கிரிப்டில் சின்ன சின்ன விஷயங்கள் மாற்றம் செய்ய வேண்டியதாக இருந்தது. மேலும் அந்த கதைக்கு அஜித்துக்கு நிகரான வில்லன் மற்ற நடிகர்கள் இருக்க வேண்டும் என்பதால் காலதாமதமானது. நிச்சயம்  விடாமுயற்சி மிகப் பெரிய ஒரு ஹிட் அடிக்கும் எனக் கூறியுள்ளார் துணிவு படத்தை விட மூன்று, நான்கு மடங்கு சிறப்பாக இருக்கும் என கூறி உள்ளார்.