ரஜினி – கமல் போல அஜித், விஜயால் செய்யவே முடியாது.? ஏன்னா அவங்க பொழப்பு வீணா போயிடும்

Ajith : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வருவது அஜித் மற்றும் விஜய். இவர்களுக்கு  கோடான கோடி ரசிகர்கள் இருக்கின்றனர் அஜித், விஜய் படம் வெளியானால் அதை திருவிழா கொண்டாடி தீர்ப்பார்கள்.  அதே சமயம் இரண்டு நடிகர்கள் ரசிகர்களும் சண்டை போட்டு வருகின்றனர் இதை சமாதானப்படுத்தவே இன்று வரை முடியவில்லை..

ஆனால் ரஜினி – கமல் அப்படி கிடையாது இருவருக்கும் இடையே போட்டிகள் இருந்தாலும் மேடை மற்றும் பொது இடத்தில் எங்கேயாவது பார்த்துக் கொண்டால் இருவரும் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் அல்லது வீடியோ கொடுப்பார்கள் இதன் மூலம் இருவருடைய ரசிகர்களும் சமாதானம் ஆகி விடுவார்கள்.

சிக்ஸ் பேக் நடிகரின் படத்தை பார்க்க மாறுவேடத்தில் போன ரஜினி.. அந்தப் படம் பெரிய ஹிட்

ஆனால் அஜித் – விஜய் புகைப்படம் அவ்வளவாக எடுத்துக் கொள்வது கிடையாது மங்காத்தா படத்தின் போது தான் அஜித் மற்றும் விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டனர் அதன் பிறகு பல வருடங்கள் ஆகியும் இருவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளவில்லை. எடுத்துக்கொண்டால் இரண்டு ரசிகர்களுமே சமாதானம் ஆகி விடுவார்கள் அல்லவா என வலைப்பேச்சு அந்தண்னிடம் கேள்வியை எழுப்பி உள்ளனர்.

இதற்கு பதில் அளித்த அவர் ஓயக்கூடாது தான்  அப்படி எந்த புகைப்படமும் அவர்கள் வெளியிடுவதில்லை.. அந்தந்த  நடிகர்களின் ஐடி விங் தான் இந்த சண்டையை செய்து வருகின்றனர். அப்படி புகைப்படத்தை போட்டு விட்டால் எல்லாம் சமாதானம் ஆகி விடுவார்கள் அது தேவையில்லாத காரியம் சண்டை இருந்தால் தான் ஒரு பரபரப்பு இருக்கும் அப்பொழுதுதான் இருவருக்கான மார்க்கெட் உயரும்..

விதிமீறலை கண்டுகொள்ளாமல் இருக்கும் கேப்டன் நிக்சன்.. இது எனக்கு அநீதியா தெரியுது என்று பெல் அடித்த மாயா

விஜய் படத்தினை யாரும் திட்டாத போது ஒரு ஐடியில் இருந்து தப்பா ட்வீட் வரும் இதேதான் அஜித் படத்துக்கு நடக்கும் இது சாதாரண ரசிகர்கள் செய்வது இல்லை நடிகர்களின் ஐடிவிங்கில் இருந்து தான் இதை செய்து வருகின்றனர். இதற்கு முன்னும் இது நடந்தது ஆனால் அவர்கள் சோசியல் மீடியாவில் இல்லாமல் டீக்கடையில் சண்டை போட்டுக் கொண்டனர் என குறிப்பிட்டார்.