இரவு 9 மணிக்கு போன் பண்ணி ஹீரோக்கள் கூப்பிடுவார்கள்.. போகவில்லை என்றால் படத்திலிருந்து தூக்கிடுவார்கள்.. உண்மையை உடைத்த நடிகை

Adjustment Call To Kamal Heroine: கமல் பட ஹீரோயின் ஒருவர் தனக்கு நேர்ந்த கொடுமையை வெளிப்படையாக கூறி அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளார். பொதுவாக சினிமாவில் உள்ள கதாநாயகிகளுக்கு அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் வருவதை கதாநாயகிகள் வெளிப்படையாக கூறிவரும் நிலையில் கமல் பட நடிகை இது குறித்து பேசி இருக்கிறார்.

அதாவது பாலிவுட்டில் பிரபல நடிகையான மல்லிகா ஷெராவத் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தசாவதாரம் படத்தில் நடித்திருந்தார். அதேபோல் சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உச்ச நட்சத்திரமாக இருக்கும் இவரே தனது வாழ்க்கையில் பல கொடுமைகளை சந்தித்து இருக்கிறாராம்.

வேலை போனதால் மனோஜை வெளுத்து வாங்கும் ரோகினி.. மாப்பிள்ளை என்று கூட பார்க்காமல் அசிங்கப்படுத்தும் மீனாவின் அம்மா.. உண்மையை சொல்வாரா முத்து..

அதாவது ஹீரோக்கள் இரவு 9 மணிக்கு மேல் போன் செய்து அழைப்பார்களாம் அப்பொழுது அவர்களிடம் போக வேண்டும் அப்படி போகவில்லை என்றால் அந்த படத்தில் இருந்து என்னை நீ நீக்கி விடுவார்கள். இதனால் தான் பல பட வாய்ப்புகள் தவறவிட்டதாக மல்லிகா ஷெராவத் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

அதோடு படத்தில் குட்டையான ஆடைகள் அணிவது, முத்தக்காட்சி நடிப்பதால் சிலர் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்கிறார்கள். படத்தில் மட்டும் அப்படி நடிக்கும் நீங்கள் ஏன் என்னுடன் இவ்வாறு இருக்க முடியாது என கேட்பார்களாம் இதனாலையே கிட்டதட்ட 50 படங்களுக்கு மேல் நடிக்கவில்லை என கூறியுள்ளாராம்.

மேலும் திரையில் இவ்வாறு நடிப்பதால் சிலர் அட்வான்டேஜ் எடுத்துக் கொள்கிறார்கள் என்றும் நிஜ வாழ்க்கையிலும் இப்படித்தான் இருப்பார்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்படுவதாகவும் அதனாலயே இவர் பல பிரச்சனைகளை சந்தித்து இருப்பதாக மன வேதனையுடன் மல்லிகா ஷெராவத் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காலையில் டிபன் சாப்பிடுவது போல் ஒரு பெண்… இரவு டின்னர் சாப்பிடுவது போல் ஒரு பெண்.. பிரப பிரபல இசையமைப்பாளரின் லட்சணத்தை கூறிய நடிகர்..

இவ்வாறு ஏராளமான நடிகைகளுக்கு இது போன்ற பிரச்சனைகள் இருந்து வரும் நிலையில் மல்லிகா ஷெராவத் இதனை வெளிப்படையாக கூறி இருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை  ஏற்படுத்தியுள்ளது.