வேலை போனதால் மனோஜை வெளுத்து வாங்கும் ரோகினி.. மாப்பிள்ளை என்று கூட பார்க்காமல் அசிங்கப்படுத்தும் மீனாவின் அம்மா.. உண்மையை சொல்வாரா முத்து..

siragadikka aasai serial February 23 : சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா அப்பா நினைவு நாள் என்பதால் மீனாவின் அம்மா மற்றும் தங்கை சொல்வதற்காக அண்ணாமலை வீட்டிற்கு வந்துள்ளார் அப்பொழுது விஜயா உங்க புருஷனே அல்ப்பாய்ஸ்ல போயிட்டார் என பேச மீனாவிற்கு கோபம் வருகிறது என்ன எதுவானாலும் பேசுங்க அப்பாவை பத்தி எதுவும் பேசாதீங்க விஜயாவிடம் முறைக்கிறார்.

அடுத்த காட்சியில் மீனா அவங்க அம்மாவை பார்த்து எதுக்கு இங்க வந்த ஒரு போன் பண்ணிருந்தா நானே வர வேணாம்னு சொல்லி இருப்பேனே இங்கே வந்தால் உங்களுக்கு இவ்வளவுதான் மரியாதை என திட்டுகிறார். பிறகு சொல்லிவிட்டு கிளம்புகிறார்கள் அண்ணாமலை விஜயாவை திட்டி  வீட்டிற்குள் அனுப்புகிறார். வெளியே செல்வதற்கு போகும்பொழுது முத்து உள்ளே வருகிறார் மாப்பிள்ளை என கூப்பிட்டதும் முத்து திரும்பி கூட பார்க்காமல் உள்ளே செல்கிறார்.

காலையில் டிபன் சாப்பிடுவது போல் ஒரு பெண்… இரவு டின்னர் சாப்பிடுவது போல் ஒரு பெண்.. பிரப பிரபல இசையமைப்பாளரின் லட்சணத்தை கூறிய நடிகர்..

உள்ளே வந்த முத்துவிடம் மீனா நாளைக்கு நீங்க வர்றீங்க வந்து எதுவும் பேச வேணாம் அசிங்கப்படுத்திடாதீங்க என பேசுகிறார். அடுத்த காட்சியில் ஸ்ருதி டப்பிங் பேசிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது சுழுதியின் அம்மா வந்துள்ளார் அங்கு வந்து எதற்காக சைக்கிளில் போனீர்கள் என கேட்க அது நான் ரவிக்கு கொடுத்த பனிஷ்மென்ட் என கூறுகிறார்.

இது என்ன ஒரு பனிஷ்மென்ட் பாக்கறவங்க என்ன நினைப்பாங்க எனக் கூற  உடனே அவர் நீயும் மாப்பிள்ளையும் இந்தாங்க டூர் போயிட்டு வாங்க அதற்கான பாஸ் இது தான் எனக் கொடுக்க உடனே ஸ்ருதியின் அம்மா நீயும் மாப்பிள்ளையும் அங்க கஷ்டமா இருந்தா வீட்டுக்கு வந்துருங்க அப்பாவும் சந்தோஷப்படுவார் என இலைமறைக் காயாக போட்டு தாக்குகிறார்.

அடுத்த காட்சியில் மனோஜ் வேலையை விட்டுவிட்டு வீட்டுக்கு வருகிறார் அப்பொழுது ரோகிணி என்னாச்சு என கேட்க வேலை விட்டதை கூறுகிறார் உடனே ரோகிணி கோபப்பட்டு நீ ஒன்னுக்கும் தேர மாட்டியா ஒரு வருஷத்துல அஞ்சு தடவை வேலையை மாத்திக்கிட்டு இருக்க நீ எப்பவுமே ஒரு வேலைக்கு உருப்படியா போக மாட்டியா இது முத்துக்கு தெரிஞ்சா எப்படி அசிங்கப்படுத்துவான் என பேச.

கமலஹாசன் சிவகார்த்திகேயனுக்கு வலுக்கும் எதிர்ப்பு…குண்டர் சட்டத்தில் கைது செய்யபடுவார்களா.?

உடனே மனோஜ் அப்ப முத்து அசிங்கப்படுத்துவதற்காக தான் நான் வேலைக்கு போகணுமா என மனோஜ் ரோகினியை எதிர்த்து பேசுகிறார் உடனே ரோகினி கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு கிளம்புகிறார். அதேபோல் மற்றொரு பக்கம் மீனாவின் அப்பா நினைவு தினத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொண்டிருக்கிறார்கள் வந்தவர்கள் முத்து இப்படி பண்ணிட்டாரே என சத்தியாவை  பார்த்து பேசுகிறார்கள்.

முத்து வருவதற்கு லேட் ஆனதால் படையலை போட்டு ஆரம்பித்து விடுகிறார்கள்  சூடத்தை காட்ட சொல்ல சத்தியா கையை தூக்கும்போது அழுது சீன் போடுகிறார் உடனே எல்லாத்துக்கும் காரணம் முத்து தான் என மீனாவின் அம்மா முத்துவை அசிங்கப்படுத்த அப்பொழுது முத்து வாசலில் வந்து நிற்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிந்தது இதன் நிலையில் நாளை எபிசோடில் முத்து மொட்டை மாடியில் நிற்கிறார் அப்பொழுது மனோஜ் மொட்டை மாடிக்கு வருகிறார் அதேபோல் அடுத்ததாக ரவியும் மொட்டை மாடிக்கு வருகிறார் மூவரும் உள்ளே ரொம்ப புழுக்கமா இருக்கு என பேசிக்கொண்டு இருக்கிறார்கள் நாளைக்கு தான் தெரியும் என்ன சண்டை என்பது.