ரசிகர்களை புரட்டி போட்ட முன்னணி நடிகைகளின் மரணம்.. நெஞ்சை உறைய வைத்த திவ்ய பாரதி..

Actresses who died mysteriously at a young age: சினிமாவில் கவர்ச்சியினாலும் நடிப்பினாலும் ஜொலித்து வந்த இளம் நடிகைகள் சிலர் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது திரைவுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வாறு பல வருடங்களை கடந்தும் அந்த இளம் நடிகைகளின் மரணம் குறித்த தெளிவான காரணம் இதுவரையிலும் வெளிவராமல் மர்மமாகவே உள்ளது அப்படி மர்மமான முறையில் இறந்த நடிகைகள் குறித்து பார்க்கலாம்.

நபீதா ஜோசப்: பாலிவுட்டில் பிரபலமாக இருந்து வந்த நடிகை நமீதா ஜோசப் தனது 26 வயதில் மரணமானார். அதாவது 2004ஆம் ஆண்டு மும்பையில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அதற்கு மன அழுத்தம் அதிகமாக இருந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக அவர் குடும்பத்தினர்கள் தெரிவித்தனர். நபீதா ஜோசப்க்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் திடீரென இவர் தற்கொலை செய்துக் கொண்டது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது தற்பொழுது வரையிலும் இதற்கான உண்மையான காரணம் வெளிவரவில்லை.

பாண்டியனை பார்க்க போன சரவணனுக்கு பெரும் அதிர்ச்சி.! அவசரப்பட்டுட்டியே சரவணா..

குல்ஜீத் ரந்தாவா: பிரபல பாலிவுட் நடிகையான இவர் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். 30 வயதில் தனது வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாமல் இந்த முடிவை எடுப்பதாக கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்துக் கொண்டார். இவ்வாறு இருந்தாலும் இவருடைய மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்படுகிறது.

விவேகா பாபாஜி: 37 வயதில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவேகா தற்கொலைக்கு காரணம் அவரது காதலன் தான் என குற்றம் சாட்டப்பட்டது. இருந்தாலும் அதற்கு உண்டான ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் அப்படியே அந்த கேஸ் மூடப்பட்டது.

சில்க் ஸ்மிதா: இந்திய சினிமாவில் தனது கவர்ச்சியினால் ஒட்டுமொத்த திரைவுலகையும் கட்டி போட்டவர் தான் சிலுக்கு ஸ்மிதா. மன அழுத்தம் காரணமாக தனது 35 வயதில் வீட்டில் தூக்கிடு தற்கொலை செய்து கொண்டார். பல கோணங்களில் விசாரிக்கப்பட்ட இவரது இறப்பில் தற்கொலை என போலீசார்கள் கூறினர் இருந்தாலும் இவருடைய இறப்பில் மர்மம் இருப்பதாக கூறப்படுகிறது.

திவ்ய பாரதி: 19 வயது திவ்ய பாரதி தனது வீட்டில் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை குறித்து விசாரிக்க இது தற்கொலை இல்லை என போலீசார் தெரிவித்தனர் ஆனால் யார் கொலை செய்தது என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போனது.

ஐயோ சரஸ்வதி என்னை மன்னித்துவிடு என்னால எதுவுமே முடியல கதறிய தமிழ்.. இனி ஆயுசுக்கும் சரஸ்வதி ஜெயிலில்தானா..

ஜியா கான்: பாலிவுட் நடிகை ஜியா கான் 2013ஆம் ஆண்டு தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இவருடைய மரணம் குறித்து பாலிவுட் சினிமாவில் விசாரிக்க பிறகு ஜியா கானின் காதலன் சூரஜை காவல்துறையினர் கைது செய்தனர். இவ்வாறு இருப்பினும் இவரது இறப்பில் மர்மங்கள் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

ஸ்ரீதேவி: கடந்த 2018ஆம் ஆண்டு பழம்பெரும் நடிகையான ஸ்ரீதேவி தனது குடும்பத்தினர்களுடன் துபாயில் நிகழ்ச்சி ஒன்றிற்காக செல்ல அங்கு ஹோட்டல் குளியல் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்ததாக தகவல் வெளியானது. ஆனால் அப்படி எப்படி இறக்க முடியும் என தற்போது வரையிலும் இவருடைய இறப்பில் என மர்மங்கள் இருந்த வருகிறது.