இனிமே நீ கிளாமரா நடிச்சா அவ்ளோ தான்.! லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய பிரபலம்

actress Seetha: சினிமாவில் நடிகைகளின் நிலைமை பொருத்தவரை அவர்கள் தங்களது இளமையான காலகட்டத்தில் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும். அதேபோல் பட வாய்ப்புகளும் கிடைக்கும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு என்னதான் பிரபலமாக இருந்தாலும் அவர்களது அழகு குறைந்து விட்டால் தங்களுக்கு கிடைக்கும் கேரக்டரில் நடிக்க வேண்டியது தான்.

இந்த சூழலில் ஒரு சில நடிகைகள் மட்டுமே வயதானாலும் கூட தங்களது மவுசை சினிமாவில் தக்க வைத்துக் கொண்டு வருகிறார்கள். மேலும் தற்பொழுது இருக்கும் காலகட்டத்தில் கவர்ச்சிக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அப்படி த்ரிஷா, நயன்தாரா என ஏராளமான நடிகைகள் கவர்ச்சியாக நடித்து வருவதையும் பார்க்க முடிகிறது.

வத்தி வச்ச மீனாவின் அம்மா.. முத்துவை விசாரிக்கப் போகும் அண்ணாமலை வெடிக்குமா பூகம்பம்..

ஆனால் 1980, 90களில் கவர்ச்சியை நம்பாமல் அவர்களது நடிப்பை மட்டுமே நம்பி இயக்குனர்களும் படம் எடுத்து பிளாக்பஸ்டர் கொடுத்துள்ளனர். அப்படி அந்த காலகட்டத்தில் நல்ல நடிப்பை மட்டுமே நம்பி வந்த பல நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சீதா. பாண்டியராஜன் இயக்கிய ஆண்பாவம் படத்தின் மூலம் அறிமுகமான கீதா பாண்டியனுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.

ஒரு கட்டத்தில் நடிகை சீதா குரு சிஷ்யன் படத்தில் மாடல் கேல் கேரக்டரில் பணக்கார வீட்டு பெண்ணாக நடித்திருந்தார். இந்த படத்தில் சில காட்சிகளில் சீதா கவர்ச்சியான மாடர்ன் டிரஸ்களை அணிந்திருந்தார். இது குறித்த தகவல் கே பாலச்சந்திரன் காதுகளுக்கு சென்றுள்ளது.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்திலிருந்து முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.? அப்போ சிம்புவுக்கு முன்னாடி இவர்தானா…

இதனால் கோபமடைந்த கே. பாலச்சந்திரன் சீதாவிற்கு போன் செய்து இந்த மாதிரி கவர்ச்சியா எல்லாம் ஏன் நடிக்கிற இப்படி நடிக்கிறது சரி கிடையாது. இனிமே இப்படி எல்லாம் நடக்கக்கூடாது என கூறியுள்ளார். அதன் பிறகு சீதாவும் இதனை ஏற்றுக் கொண்டு கவர்ச்சியாக நடிப்பதை முற்றிலும் தவிர்த்து உள்ளார்.