தெரியாம அந்த சூர்யா படத்தில் நடிச்சிட்டன்… இன்றுவரை வருத்தப்படும் முன்னணி நடிகை..!

Actress Nayanthara: சினிமாவில் மட்டுமில்லாமல் தொழிலதிபராகவும் கலக்கி வரும் நயன்தாரா கடந்தாண்டு பல தொழில்களை தொடங்கியுள்ளார். ஆனால் சினிமாவில் முன்பை விட இவருடைய மார்க்கெட் குறைந்த இருப்பதால் இவருடைய படங்கள் சொல்லும் அளவிற்கு வெற்றி பெறவில்லை.

மேலும் தனது கணவருடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் நயன்தாரா இதில் சில திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் இந்த படங்களும் பெரிதாக வருமானத்தை தரவில்லை. எனவே இதனால் தொழிலில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார்.

மேகனாவால் குடும்பத்தில் ஏற்பட்ட சர்ச்சை… பிரிவில் தமிழும் சரஸ்வதி.? எதிர்பார்ப்பில் தமிழும் சரஸ்வதியும்

தென்னிந்திய சினிமாவில் ஹீரோக்களுக்கு நிகராக அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா ஏராளமான சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். இருந்தாலும் அதனை எல்லாம் பெரிதாக பொருட்படுத்தாமல் சினிமாவில் நடித்து லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் ஒரு படத்தில் 10 கோடி வரை சம்பளம் வாங்கும் நடிகையாக உருவெடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவை தொடர்ந்து சமீபத்தில் பாலிவுட்டிலும் அடி எடுத்து வைத்திருக்கும் இவர் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்திருந்தார் இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதனை அடுத்து தமிழில் அன்னபூரணி திரைப்படம் வெளியாகி படும் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் நயன்தாரா ஒரு படத்தில் நடித்தது நினைத்து வருத்தப்பட்டு வருகிறாராம். அதாவது கஜினி படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நயன்தாரா நடித்திருப்பார் முதல் கதாநாயகியாக அசின் நடுத்திருப்பார் இப்படத்தில் நயன்தாராவின் ரோலுக்கு முக்கியத்துவம் இல்லை. எனவே கஜினி படத்தின் நடித்திருக்கவே கூடாது என இன்றுவரையிலும் நினைத்து வருத்தப்பட்டு வருகிறாராம்.

பார்க்கில் குத்தாட்டம் போட்ட மனோஜ்.. வீடியோ எடுத்து குடும்பத்தினருக்கு காட்டிய முத்து – சிறக்கடிக்க ஆசை

கஜினி படத்திற்கு பிறகு பல திரைப்படங்களை நடிக்க வாய்ப்பு கிடைத்திருந்தாலும் ஆனால் முதன்மை கதாநாயகியாக நடிப்பேன் என உறுதியாக இருந்துள்ளார். இந்நிலையில் சமீப காலங்களாக நயன்தாரா நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் சொல்லும் அளவிற்கு ஹிட் அடிக்க வில்லை.