சினிமா தான் எனக்கு அனைத்தையும் கொடுத்தது.. அப்பா என்றால் அது இந்த நடிகர் மட்டும் தான்? நயன்தாராவின் கலக்கல் பேட்டி

Actress Nayanthara: தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து வரும் நடிகை நயன்தாராவிற்கு பல பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் கலக்கி வந்த நயன்தாரா சமீபத்தில் பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்துள்ளார்.

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நயன்தாரா இணைந்து நடித்த ஜவான் படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இவ்வாறு தொடர்ந்து வெற்றி இயக்குனர்களின் திரைப்படங்களில் நடித்து வரும் நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் அன்னபூரணி திரைப்படம் வெளியானது.

அர்ச்சனாவை ரவுண்டு கட்டிய ஹவுஸ் மெட்ஸ்கள்.! ஒருத்தவங்களோட வீக்னஸ் தெரிஞ்சுக்கிட்டு அதை குத்தி குத்தி காட்டுறது தான் உங்களோடைய பொழப்பே..

இந்த படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்தாலும் மழை வெள்ளம் காரணமாக சென்னை உள்ளிட்ட சில மாவட்ட மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் இதனால் பட வசூலில் பாதிப்பை சந்தித்துள்ளது. இப்படத்தில் அன்னபூரணியாக நயன்தாரா நடிக்க நடிகர் ஜெய், சத்யராஜ், கே.எஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரேணுகா, சுரேஷ் சக்கரவர்த்தி, பூர்ணிமா ரவி, முகமது இர்ஃபான், திடியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த படத்தின் ப்ரோமோஷனில் நயன்தாரா மற்றும் ஜெய் இருவரும் ஈடுபட்டு வந்தார்கள். சில தினங்களுக்கு முன்பு கல்லூரி மாணவர்களுக்கு இருவரும் பிரியாணி பரிமாறியது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் தற்பொழுது இவர்கள் இருவரும் இணைந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு பேட்டி அளித்துள்ளனர்.

தொப்புள் குழியில் பம்பரத்தை சுத்தவிட்ட சுகன்யாவின் மறுபக்கம்.. வெளியே சொன்ன பிரபலம்

அப்பொழுது நயன்தாரா சினிமா தான் என்னுடைய வாழ்க்கையில் அனைத்தையும் கொடுத்துள்ளதாக நெகிழ்ச்சி உடன் வெளிப்படுத்தினார். தனக்கு அதிகப்படியான பெயர், பணம், மரியாதை ஆகியவற்றை சினிமா தான் கொடுத்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் படங்களில் தனக்கு அப்பா என்றால் அது சத்யராஜ் தான் என்றும் அவர் கூறியிருக்கிறார். இவ்வாறு நயன்தாராவின் இந்த பேட்டி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.