சத்தமே இல்லாமல் சமந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்த நயன்தாரா..! இதுல உள்குத்து இருக்குமோ..

Actress Nayanthara congratulated Samantha: சினிமாவிற்கு அறிமுகமான காலக்கட்டத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து தற்போது கோலிவுட்டில் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் தான் சமந்தா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் சமீப காலங்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் நடிகை சமந்தாவுக்கு நயன்தாரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவிக்க இது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. நடிகை சமந்தா கௌதமேனன் இயக்கத்தில் திரிஷா-சிம்பு இணைந்து நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

நைட் ரூம்க்கு வரியா பிரபல நடிகையை அழைத்த நடிகர்.! வெளிப்படையாக உண்மையை உடைத்த கிரண்…

இதனை அடுத்து இப்படத்தின் தெலுங்கு பதிப்பில் சமந்தாவை ஹீரோயினாக நடிக்க வைத்தார் கௌதம் மேனன். இதன் மூலம் சமந்தாவின் திரை வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைய தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்றார்.

தற்பொழுது விண்ணைத்தாண்டி வருவாயா படம் வெளியாகி பிப்ரவரி 26ம் தேதி இன்றோடு 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இவ்வாறு சமந்தா திரைவுலகிற்கு வந்து 14 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் எனவே சோசியல் மீடியாவில் ரசிகர்கள் இதனை ட்ரெண்டிங்காக்கி வருகின்றனர்.

மீண்டும் ஹீரோயின் ஆகிய ஓவர் திமிரால் துரத்தியடிக்கப்பட்ட நடிகை.! யார் நடிகர் தெரியுமா…?

இந்நிலையில் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் சமந்தாவுடன் இணைந்து நடித்த நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் 14 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு வாழ்த்துக்கள்… உங்களுக்கு நிறைய ஆற்றல் கிடைக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார். இதற்கு நன்றி என் அழகியே என சமந்தா பதில் அளித்துள்ளார்.