உங்க தவிப்பு புரியுது நயன்தாரா மேடம்.! ஆனா தயாரிப்பாளர் நிலைமையை கொஞ்சம் யோசிச்சு பாத்தீங்களா.! கோடி கோடியா கொட்டி கொடுக்கிறோமே..

Actress Nayanthara: லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் நடிகை நயன்தாரா 20 ஆண்டுகளைக் கடந்து சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்துடன் திரைப்படங்களில் நடித்து பிசியாக இருந்து வருகிறார். அப்படி தமிழ் சினிமாவின் மூலம் பிரபலமான நடிகை நயன்தாரா தற்போது பாலிவுட்டிலும் அறிமுகமாகி இருக்கும் நிலையில் இவருடைய வளர்ச்சி அனைவரையும் ஆச்சரியமடைய வைக்கிறது.

மலையாளத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான மனசினகாரே என்ற படத்தின் மூலம் சினிமா கெரியரை தொடங்கிய நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமானார் இதனைத் தொடர்ந்து ரஜினி, விஜய், அஜித், சூர்யா, கார்த்தி என ஏராளமான டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

விஜய் சினிமா வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை..! அடிமட்டமாக இறங்கி கலாய்க்கும் ப்ளூ சட்டை மாறன்.!

தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த நயன்தாரா தற்பொழுது பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்துள்ளார். அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படங்களை தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து வருவதனால் தன்னுடைய சம்பளத்தை பல மடங்கு நயன்தாரா உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துக் கொண்டு, வாடகை தாயின் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயான நயன்தாரா தனது குழந்தைகளுடன் அதிகமான நேரத்தை செலவழித்து வருகிறார். அப்படி இவர் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களும், வீடியோக்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

வைல்ட் கார்டில் பிக் பாஸ் வீட்டிற்கு என்ட்ரி கொடுத்த பிரபலங்களின் சம்பள விவரம்.! விசித்ராவிற்கு அடுத்ததாக அதிக சம்பளம் வாங்குபவர் கானா பாலாவா?

இந்த சூழலில் தற்பொழுது நயன்தாரா ஜெய்யுடன் இணைந்து அன்னபூரணி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இப்படத்தினை சங்கரின் உதவி இயக்குனர் நிலேஷ் இயக்க வருகின்ற டிசம்பர் 1ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இவ்வாறு நயன்தாரா காலை 11 மணிக்கு வந்தால் 5 மணி வரை மட்டுமே நடிப்பேன் என இயக்குனர்களிடம் கூறி வருகிறாராம்.

வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற பரபரப்பு உடனே நயன்தாரா இருப்பதாகவும் தனது குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டும் என தாயாக நயன்தாரா நினைப்பதை புரிந்து கொள்ள முடிந்தாலும் பல கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தின் காட்சிகள் நல்லபடியாக எடுக்க வேண்டும் என தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் விரும்புவதாக கூறப்படுகிறது. ஆனால் நயன்தாரா தொடர்ந்து கண்டிஷன் போட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறாராம்.