சூப்பர்ஸ்டார் ரஜினியை வாடா என அழைத்த நடிகை குஷ்பூ.. அதிர்ந்து போன படக்குழு – யாரும் அறிந்திராத செய்தி

Khushbu : 80, 90 காலகட்டத்தில் ரசிகரின் கனவு கன்னியாக ஓடியவர் நடிகை குஷ்பூ. இவர் முதலில் தர்மத்தின் தலைவன் படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமானார் அதனை தொடர்ந்து வெற்றி விழா, கிழக்கு வாசல், தாலாட்டு பாடவா, சின்ன தம்பி, மன்னன், அண்ணாமலை, பாண்டியன், தேடி வந்த ராசா என வெற்றி படங்களை கொடுத்து ஓடி கொண்டிருந்த குஷ்பூ..

நடிகரும், இயக்குனருமான சுந்தர் சி யை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் இரு மகள்கள் இருக்கின்றனர் தற்பொழுது படங்களில் அதிகம் நடிக்கவில்லை என்றாலும் தயாரிப்பாளராகவும் அரசியலிலும் ஜொலித்து வருகிறார்.

அப்பத்தாவை கடத்தி கரும காரியம் பண்ணி நாடகமாடும் குணசேகரன் தம்பிகள்..

இப்படிப்பட்ட குஷ்பூ சினிமா ஆரம்பத்தில் நடந்த சில கசப்பான அனுபவங்களை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அவர் சொன்னது என்னவென்றால்.. தர்மத்தின் தலைவன் படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக குஸ்பூ நடித்தார். படத்தின் ஹீரோ ரஜினி ஷூட்டிங் ஸ்போட்டிற்கு வருகிறார் என சொல்ல அனைவரும் வரவேற்க நின்றனர்.

அப்பொழுது குஷ்பூவுக்கு தமிழ் தெரியாததால் ரஜினியை எப்படி வரவேற்க வேண்டும் என யோசித்துக் கொண்டிருந்தாராம் அப்பொழுது பக்கத்தில் இருந்தவர்களிடம் கேட்கும் பொழுது வாடா என கூறியுள்ளார்கள். ரஜினி சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்தவுடன் வாடா என குஷ்பூ கூறியுள்ளார் இதனால் மொத்த யூனிட்டுமே அதிர்ச்சியாம் மேலும் ரஜினிக்கும் தூக்கி வாரி போட்டதாம்..

ஜிகர்தண்டா படத்தில் நான்தான் நடிக்க வேண்டியது.! ஜிகர்தண்டா 3 பார்த்தேன் என என்றாவது ஒரு நாள் பதிவிடுவேன்.! பிரபல நடிகர் அதிரடி பதிவு..

அதன் பிறகு பலரும் நீங்கள்  வாடா என கூப்பிட்டது ரொம்ப தப்பு அப்படி கூப்பிடக்கூடாது என சொல்லி இருக்கிறார்கள் அதன் பிறகு குஷ்பூ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து மனிப்பு கேட்டுக் கொண்டாராம் இது தன் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு கசப்பான சம்பவம் என கூறி இருக்கிறார்.