ஜிகர்தண்டா படத்தில் நான்தான் நடிக்க வேண்டியது.! ஜிகர்தண்டா 3 பார்த்தேன் என என்றாவது ஒரு நாள் பதிவிடுவேன்.! பிரபல நடிகர் அதிரடி பதிவு..

Jigarthanda DoubleX : தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குனர்கள் இருந்தாலும் ஒரு சில இயக்குனர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் அதிலும் ஒரு சில திரைப்படங்களை இயக்கி விட்டு ரசிகர்கள் மனதில் நீங்க இடத்தை பிடிப்பார்கள் அந்த வகையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் குறைவான திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் ரசிகர்கள் மனதில் நிறைவாக இடம் பிடித்துள்ளார்.

அந்த வகையில் தீபாவளி தினத்தை முன்னிட்டு தான் இயக்கிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தீபாவளி தினத்தில் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் எஸ். ஜே. சூர்யா ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள் படத்திற்கு சந்தோஷ நாராயணன் தான் இசை அமைத்திருந்தார் திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் ரசிகர்களிடம் முதல் நாளில் வரவேற்பை பெறாத நிலையில் வெளியாகிய ஓரிரு நாட்களிலேயே ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுவிட்டது.

படம் வெளியாகி வசூலிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. மேலும் ஜிகர்தண்டா திரைப்படத்தை பல நடிகர்கள் பாராட்டி வருகிறார்கள். அந்த வகையில் இயக்குனரும்  நடிகருமான பார்த்திபன் படத்தில் நடித்த மற்றும் படத்தில் பணியாற்றிய படக்குழுவினருக்கும் இயக்குனருக்கும் என அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அந்தப் பதிவில் அவர் கூறியதாவது Good afternoon friends Jigarthanda -3’ பார்த்தேன் -FDFS என என்றாவது ஒரு நாள் நான் பதிவிடுவேன். காரணம்… ஜிகர்தண்டா -2 ! நான் விமர்சகன் அல்ல. நிறை குறை சொல்ல! தெரியாமல் போய்,போன இடத்தில் பிடித்து விட்டால்
அதன் பெயர் பேய்! இது கார்த்திக் சுப்புராஜ் என்ற பேயை பிடித்து போய் தானே படத்திற்கே போகிறேன். நினைத்தபடியே மனதை உலுக்கி விட்டது. நண்பர் Mr larence, நண்பர் mr s j surya, நண்பர் திரு சந்தோஷ் நாராயணன், நண்பர் திரு திரு, நண்பர் திரு கதிரேசன் , இன்னும் நாயகி உட்பட பலரும், யானை பலத்துடன் மிரட்டுகிறார்கள்., மிரட்டும் யானைகளோ நம் கண்களில் நீர் சுரக்க நடிக்கிறார்கள்.

பெரும்பாலான காட்சிகளில் கரைந்தேன் Jigarthanda -1 நான் நடித்திருக்க வேண்டிய படம். ,முதல் பட அறிமுகத்திற்கு முன்பே நண்பர் திரு கார்த்திக் சுப்புராஜை எனக்கு அறிமுகம் என்பதால் கூடுதல் மகிழ்ச்சி , தியேட்டரில் வெடித்த கைதட்டல்களை தீபாவளி பட்டாசாக ரசித்தேன் என பதிவிட்டுள்ளார்.