மாமன்னன் தந்த வெற்றி.. சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய கீர்த்தி சுரேஷ்.!

Actress Keerthi Suresh: நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர் வெற்றிக்கு பிறகு தனது சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சினிமாவை பொருத்தவரை நடிகர்களை விட நடிகைகளுக்கு குறைவான சம்பளம் வழங்கப்படுவது வழக்கம் அப்படி ஒரு சில நடிகைகள் மட்டுமே நடிகர்களுக்கு சமமாக சம்பளம் வாங்கி வருகின்றனர்.

இவ்வாறு விரைவில் நடிகர்கள் அளவிற்கு கீர்த்தி சுரேஷ் சம்பளம் வாங்க முடிவெடுத்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த ரஜினி முருகன் திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. எனவே இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய்வுடன் பைரவா, விக்ரமுடன் சாமி 2, தனுஷ் உடன் தொடரி, ரஜினியுடன் அண்ணாத்த போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வந்தார்.

ஜப்பான் படத்தை மண்டையில் தட்டி ஓடவிட்ட ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.. முதல் வாரத்தில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

மேலும் மகாநடி படத்தின் மூலம் தேசிய விருதையும் பெற்றார். பின்னர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்து வந்த நிலையில் அந்த படங்கள் சொல்லும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. எனவே இதனால் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக கலக்கி வரும் கீர்த்தி சுரேஷ் சமீப காலங்களாக சொல்லும் அளவிற்கு பட வாய்ப்புகள் தமிழில் அமையாத காரணத்தினால் தொடர்ந்து அக்கட தேச படங்களில் நடித்து வருகிறார்.

இதனை அடுத்து உதயநிதி ஸ்டாலின், வடிவேலு கூட்டணியில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த மாமன்னன் படத்தில் ஹீரோயின் ஆக நடித்திருந்தார். இப்படத்தில் இவருடைய கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. பெரிதாக இவருடைய காட்சிகள் இல்லை என்றாலும் தனக்கு கொடுத்த கேரக்டரில் கச்சிதமாக நடித்திருந்தார்.

லியோ மோசமான விமர்சனம்.. தம்பி உன் LCU- லாம் நீயே வச்சிக்கோ கட்டளை இட்ட சன் பிக்சர்.. தலைவர் 171க்கு நாள் குறித்த லோகேஷ்..

எனவே மாமன்னன் படத்தின் வெற்றிக்கு பிறகு கீர்த்தி சுரேஷ் தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளாராம். அதாவது மாமன்னன் படம் வரையிலும் ரூ.2 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த கீர்த்தி சுரேஷ் சமீப காலங்களாக நடித்து வரும் படங்களுக்கு ரூ.3 கோடி வாங்கி வருவதாக கூறப்படுகிறது.