படவாய்ப்பு இல்லாததால் அடிமட்ட லெவலுக்கு இறங்கி அடிக்கும் நடிகை..!

Actress Kausalya To Act In A TV Serial: ஒரு காலகட்டத்தில் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை கௌசல்யா. வயதான காரணத்தினால் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய சினிமாவை விட்டு விலகினார். பொதுவாக சினிமாவை பொறுத்தவரை நடிகர்கள் தங்களது 60 வயதை கடந்தும் கூட தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க முடியும்.

ஆனால் நடிகைகள் அப்படி கிடையாது வயதாகிவிட்டால் சினிமாவை விட்டு விலக வேண்டும் இல்லை என்றால் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி நடிகை கௌசல்யாவிற்கு சமீப காலங்களாக பட வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சீரியலில் களமிறங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

கோபிக்கு வக்காலத்து வாங்கிய ஈஸ்வரி.. கழுவி கழுவி ஊற்றிய ராதிகா… என்னா சார் வசமா மாட்டிகிட்டிங்க போல..

ரசிகர்கள் மிகவும் மோசமாக விமர்சனம் செய்து வரும் சன் டிவியின் சுந்தரி சீரியலில் தான் என்ட்ரி கொடுத்துள்ளார் தற்பொழுது சுந்தரி சீரியலின் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் கேப்ரியல்லாவுடன் இணைந்து பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். மேலும் மூத்த நடிகை வடிவுக்கரசி வில்லி கேரக்டரில் என்ட்ரி கொடுத்ததை தொடர்ந்து கதை விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது.

இதில் மேலும் சுவாரசியத்தை சேர்க்கும் வகையில் திரைப்பட நடிகை கௌசல்யாவை அறிமுகப்படுத்தி உள்ளார்கள். சீசன் ஒன்னில் நந்தன் பாரதி என்ற கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் தற்பொழுது இந்த நந்தன் பாரதி கதாபாத்திரம் நீடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கதிரை ஆள் வைத்து அடித்த குமாரவேல்..! கண்ணீருடன் அழுதுகொண்டே கேட்கும் ராஜி.. கண்டுக்காமல் போன பாண்டியன்…

முன்னணி நடிகையாக சினிமாவில் கலக்கி வந்த கௌசல்யா பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் இப்படி சீரியலுக்கு வந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் கௌசல்யா இதன் மூலம் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் பெற்று திரைப்படங்களில் நடிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.