5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கும் கார்த்தியின் முறைபோன்னு.!

Actress Arthana Binu: கார்த்தியின் முறை பொன்னாக நடித்த பிரபல நடிகை கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்குப் பிறகு தற்பொழுது மீண்டும் தமிழ் சினிமாவில் நடித்திருக்கும் நிலையில் அந்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.  தொண்டன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை அர்த்தனா பினு.

மலையாள நடிகையான இவர் தெலுங்கில் தான் முதலில் அறிமுகமானார் அதன் பின்னர் தான் மலையாளத்தில் அறிமுகமானார். அதன் பிறகு தமிழ் திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கினார் கடைசியாக இவர் வெண்ணிலா கபடி குழு படத்தின் இரண்டாவது பாகத்தில் நடித்திருந்தார்.

ரோகிணி பார்லரை வித்தத முத்து சொன்னா என்ன நடக்கும் தெரியுமா.. கொஞ்சம் அடக்கி வாசிங்க எல்லோரும்..

இந்த படம் 2019ஆம் ஆண்டு வெளியானது அதன் பிறகு கிட்டத்தட்ட ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு தமிழ் எந்தவொரு படமும் வெளியாகவில்லை குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கார்த்திக் நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்தியின் முறை பெண்ணாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது 5 வருடங்களுக்கு பிறகு வாஸ்கோடகாமா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது நீண்ட நாட்களாக உருவாகி வரும் இந்த படம் விரைவில் திரையரங்கங்களில் வெளியாக வெளியாக உள்ளதாம்.

ஓன் பொண்டாட்டிய நான் தான் ஆள வச்சு கொடுமை படுத்தினேன் என தமிழிடம் திமிராக பேசும் அர்ஜுன்! அடுத்து நடக்கப்போவது என்ன.. தமிழும் சரஸ்வதியும்..

வாஸ்கோடகாமா படத்தை ஆர் ஜி கிருஷ்ணன் இயக்க கே.எஸ் ரவிக்குமார், மன்சூர் அலிகான், கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் கார்த்தியின் முறை பொண்ணு அர்த்தனா பீனுக்கு தமிழில் பக்கவான ரீ என்ட்ரி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வாஞ்சிநாதன் ஒளிப்பதிவு செய்ய அருண் இசை அமைத்துள்ளார்.