செல்பி எடுக்க வந்த இளம்பெண் முகத்தில் 300 நம்பியாரை காட்டிய விஜய்.. விடுங்க தளபதி உங்க தீவிர ரசிகையா இருப்பாங்க..

Thalapathy Vijay: தளபதி விஜய் திருநெல்வேலியில் மக்கள் சந்தித்த நிவாரண பொருட்களை வழங்கும் பொழுது ஏற்பட்ட பல சம்பவங்களின் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நெய்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு தரப்பில் மட்டும் இன்றி பல தன்னார்வலர்கள் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தினர் மூலம் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள், கனமழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களிலும் பல நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். இந்நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் மன்றம் சார்பில் திருநெல்வேலி பாளையங்கோட்டை கேடிசி நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் மக்களுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது.

நியூ இயர் அதுவுமாக பிறந்த நாள் காணும் சினிமா பிரபலங்கள்.! ஆத்தாடி இத்தனை பேர் ஜனவரி 1ல் பிறந்தவர்களா..

உயிரிழந்தோர், வீடு இழந்தோர் உள்ளிட்ட பலருக்கும் பண உதவிகளும் செய்துள்ளார். குடும்பங்களுக்கு அரிசி, கோதுமை மாவு உள்ளிட்ட சமையலுக்கு தேவையான பொருட்களை நிவாரண உதவியாக வழங்கினார் விஜய். நிவாரண உதவிகளை பெறுவதற்காக ஏராளமான மக்கள் திரண்டனர் அதேபோல் நெல்லை மாவட்டத்திலும் கிட்டத்தட்ட 400 பேரை தேர்வு செய்து நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

thalapathy vijay
thalapathy vijay

அப்பொழுது தளபதி விஜய்யின் ரசிகர்கள், மன்ற நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் விஜய்யுடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டனர் பெண்கள் முதல் வயதானவர்கள் வரை மிகவும் உற்சாகத்துடன் இருந்ததை பார்க்க முடிந்தது. அப்படி ஒரு பெண் நடிகர் விஜய்யுடன் செல்பி எடுத்துக் கொண்டு நிவாரண உதவியை பெறாமல் சென்றார். அதற்கு விஜய் கூப்பிட்டு செல்பி எடுக்கதா வந்தியா பொருட்கள் எதுவும் வேண்டாமா என்று கேட்க அதற்கு பெண் வேண்டாம் எனக் கூற விஜய் சரி ஓகே போ போ என்று செம க்யூட் ஆகக் கூறியிருந்தார்.

ஏன்டா பரதேசி உன் மனசு மட்டும் இரும்பால செஞ்சதா.. வடிவேலுவை கிழித்து தொங்க விட்ட பலே நடிகர்..

அந்த வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது இவ்வாறு நடிகர் விஜய் அரசியலில் ஈடுபட இருப்பதாக கூறப்படும் நிலையில் எனவே இதற்காகத்தான் இந்த நல உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார் எனக் கூறப்படுகிறது.