ரஜினி நிராகரித்த கதை.. 100 கோடி பட்ஜெட்டில் இணைந்த சிம்பு.!

Simbu 48: ரஜினிகாந்த் நிராகரித்த படத்தில் சிம்பு நடிக்க இருக்கும் நிலையில் அது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தனது 70 வயதை கடந்த பிறகும் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். வயதானாலும் ரசிகர்கள் மத்தியில் இவருக்கென இருக்கும் மவுசு கொஞ்சம் கூட குறையவில்லை.

அப்படி கலவை விமர்சனங்களை பெற்றாலும் இவர் படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் பெற்று வருகிறது. அந்த வகையில் கடைசியாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் கலவை விமர்சனத்தை பெற்றாலும் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

கோமதி பிறந்தநாளுக்கு கிப்ட் வாங்கி கொடுத்த பாண்டியன்.. அசந்து போன மகன்கள் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் தனது 171வது படத்தில் நடிக்க இருக்கிறார். தற்பொழுது ஞானவெல் இயக்கி வரும் தனது 170வது படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்தவுடன் லோகேஷ் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தின் படப்பிடிப்புகள் துவங்க இருக்கிறது.

அந்த வகையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்க இருப்பதாக லோகேஷ் அறிவித்துள்ளார். ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பிற்கு முன்பு சில இளம் இயக்குனர்களிடம் ரஜினி கதை கேட்டார் அப்படி அவர்களில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி மற்றும் டான் படத்தை இயக்கிய சிபி ஆகியோர்களின் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

Baakiyalakshmi Promo : உங்களுக்கு துரோகம் பண்ணவங்கள விட்டு விலகி தானே இருந்தீங்க.. நான் மட்டும் உங்க பையன் கூட சேர்ந்து வாழனுமா.. பாக்கியாவை கேள்வி கேட்ட ஜெனி

எனவே ரஜினி இந்த இரண்டு இயக்குனர்களின் படங்களை நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியான நிலையில் ஆனால் திடீரென நெல்சனின் ஜெயிலர் படத்தில் நடிக்க தொடங்கி விட்டார். இந்நிலையில் ரஜினியிடம் கூறிய அதே கதையை சிம்புவிடம் தேசிங்கு பெரியசாமி கூற அந்த கதை சிம்புவுக்கு பிடித்து போனதால் தற்பொழுது இவர்களுடைய கூட்டணியில் சிம்புவின் 48வது படம் உருவாக உள்ளது. இப்படத்தினை கமலின் ராஜ்கமல் பிலி்ம்ஸ் நிறுவனம் சுமார் 100 கோடி பொருட்செலவில் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.