த்ரிஷா வாழ்க்கையில் ஒலி ஏற்றியதே அமீர்தான்.! மௌனம் பேசியதே முதல் படம் இல்லையாம்.. முழு விவரம் இதோ

Actress Trisha: நடிகை த்ரிஷாவிற்கு மௌனம் பேசியதே படத்தின் வாய்ப்பு எப்படி அமீர் கொடுத்தார் என்பது குறித்து தெரியவந்துள்ளது. கிட்டத்தட்ட 22 வருடங்களாக சினிமாவில் முன்னணி கதாநாயகியாகா த்ரிஷா விளங்கி வருகிறார். சில படங்கள் தோல்வியடைந்தாலும் தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த இவருடைய படங்கள் சூப்பர் ஹிட் பெற்றது.

அப்படி இடையில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் தோல்வி அடைந்ததால் இவருடைய மார்க்கெட் அவ்வளவுதான் என கூறப்பட்டது. ஆனால் மீண்டும் விஜய் சேதுபதி உடன் இணைந்து நடித்த 96 படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. 96 படத்தின் வெற்றிக்கு பிறகு பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக நடித்து மிரட்டினார்.

தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறக்கும் டாப் ஹீரோகளுக்கு பிடித்த நடிகர்.!

மேலும் விஜய்யின் லியோ திரைப்படத்திலும் நடித்தது ரசிகர்களை கவர்ந்தது. திரிஷா தமிழில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என ஏராளமான உச்சத்தில் இருக்கும் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் சோலோவாகவும் நடித்து மிரட்டினார். இந்நிலையில் த்ரிஷாவுக்கு மௌனம் பேசியதே படத்தில் நடிக்க எப்படி வாய்ப்பு கிடைத்தது என்பது தெரிய வந்துள்ளது.

அதாவது த்ரிஷா மிஸ் சென்னை பட்டம் வென்ற பிறகு மாடலிங்கில் பணியாற்றி வந்தாலும் சினிமாவின் மீது பெரிதாக ஆர்வமில்லை. இந்த நேரத்தில் தான் அமீர் தன்னுடைய முதல் படமான மௌனம் பேசியதே படத்தை தொடங்கினார். அப்பொழுது புதிய ஹீரோயின் யாராவது நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என யோசித்துள்ளார் அமீர்.

டிசம்பர் பூக்கள் போல் டிசம்பர் மாதத்தில் அடுத்தடுத்து வெளியாகும் 14 திரைப்படங்கள்..!

இவர் புத்தகம் படிக்கும் பழக்கம் கொண்டவராம் அப்படி ஒரு நாள் படித்துக் கொண்டிருக்கும் பொழுது த்ரிஷாவின் புகைப்படத்தை பார்த்துள்ளார். இந்த பொண்ணு தான் கரெக்ட்டா இருக்கும் என நினைத்து த்ரிஷாவிடம் பேசி சம்மதம் வாங்கியுள்ளார். மேலும் இந்த நேரத்தில் பிரியதர்ஷன் இயக்கிய லேசா லேசா படத்திலும் கமிட்டாகி உள்ளார். ஆனால் இது அமீருக்கு தெரியாமல் போய் உள்ளது. லேசா லேசா படத்தில் ஏதோ பிரச்சனை இருந்ததாம் இந்த சமயத்தில் மௌனம் பேசியதே படம் ரிலீசானதால் இதுவே த்ரிஷாவின் முதல் படமாக அமைந்துள்ளது.