மகா என்னைக்குமே எனக்கு ஒரு மூணாவது மனுஷி தான் வார்த்தையால் குத்திய சூர்யா – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்..

Aaha kalyanam today episode November 27 : இன்றைய எபிசோடில் ஐஸ்வர்யா மாடர்ன் டிரஸ் போட்டு கொண்டு அட்வடேஸ்மெண்டுக்கு போயிட்டு திரும்பி வீட்டிற்கு வரும் பொழுது வீட்டில் எல்லோரும் ஐஸ்வர்யாவை பார்த்து என்ன இப்படி டிரஸ் பண்ணிட்டு போயிருக்க என்று ஐஸ்வர்யாவை திட்டுகின்றனர்.

பிறகு சித்ராதேவி ரோட்ல போயிட்டு இருந்தவள மருமகள் என்று வீட்டுக்கு கொண்டுட்டு வந்தீங்க இல்ல அதான் அவ இஷ்டத்துக்கு ஆடுறா என்று சொல்ல மகா விற்கு கோபம் வந்து அக்கா தப்பு பண்ணா தான் அதுக்காக நீங்க எந்த தப்பும் பண்ணலன்னு ஆயிடுமா என்று கேட்க பிறகு சித்ரா தேவி  அக்காவும் தங்கச்சியும் சேர்ந்து இந்த வீட்டு சொத்துக்கு தானே ஆசைப்படுறீங்க..

விசித்ரா “நரி”.. மாயா, பூர்ணிமாவுக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர் என்ன தெரியுமா.? காரணத்தை சொல்லி அதிர வைத்த அனன்யா

இவளும் இந்த வீட்டுக்கு முக்காடு போட்டுட்டு வந்தவ தானே என மகாவையும் திட்டுவதற்கு சூர்யா சித்தி நிறுத்துங்க உங்க மருமகள் பண்ண தப்புக்கு இப்ப எதுக்கு பழசு எல்லாம் பேசி மகாவை குறை சொல்றீங்க.. இந்த வீட்டு மருமகள் எப்படி இருக்கணும் என்றதுக்கும் எப்படி இருக்கக்கூடாது என்றதுக்கும் மகாவும் ஐஸ்வர்யாவும் தான் உதாரணம்..

இவங்க ரெண்டு பேரும் அக்கா தங்கச்சி என்று சொன்னால் யாருமே நம்ப மாட்டாங்க மகா கிட்ட இருக்கிற நல்ல குணம் எதுவும் ஐஸ்வர்யா கிட்ட இல்லை என்று மகாவிற்கு சப்போர்ட் பண்ணி பேசுகிறார்.. அடுத்து மகா கிருஷ்ணன் சாமிய கும்பிட்டு என் புருஷன் இன்னைக்கு எனக்கு சப்போர்ட் பண்ணி பேசினாரு..

முதல் படத்திலேயே “பெரிய ஹிட்” கொடுத்த 5 நட்சத்திரங்கள்.. ஆட்டோகிராப் வாங்க போன இடத்தில் ஹீரோவாக மாறிய நடிகர்

எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு கூடிய சீக்கிரமே அவர் என்னை மனைவியை ஏத்துப்பாரு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் பிறகு ராஜலட்சுமி சூர்யாவை பார்த்து கொஞ்ச நாளாவே உன்னோட நடவடிக்கை ஒன்னும் சரியில்ல மகா மேல காதல் உனக்கு வந்துச்சா என்று கேட்க.. அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா..

நீங்க யாரும் இல்லாத நேரத்துல எனக்கு உடம்பு சரியில்லை மகா தான் ஹாஸ்பிடலுக்கு அழைத்துக்கொண்டு போய் உதவி பண்ணுனா அதனால நம்ம கூட இருக்கிறவங்களுக்கு ஒரு பிரச்சனைன்னு வரும்போது ஹெல்ப் பண்ணனும் என்ற எண்ணத்தில் தான் பேசின மகா என்னைக்குமே எனக்கு ஒரு மூணாவது மனுஷி தான் என சூர்யா பேசிக் கொண்டிருக்கிறார்.

இதனை மகாவும் காதில் வாங்கிக் கொண்டு பிறகு காயத்ரி இடம் நான் இந்த வீட்ட விட்டு போறேன், சூர்யா என்னை மனைவியா ஏத்துக்க மாட்டார் போல அவங்க அம்மா கிட்ட மகா என்னைக்குமே எனக்கு ஒரு மூணாவது மனுஷி தான் என சொல்றாரு எனக்கு அதைக் கேட்கும் போது ரொம்ப கஷ்டமாயிடுச்சு என்று சொல்ல..

காயத்ரி நீ வந்ததுக்கு அப்புறம் தான் சூர்யா ரொம்ப மாறி இருக்கான் நீ இந்த வீட்டை விட்டு போக கூடாது இங்கே இரு நான் சூர்யா கிட்ட பேசுறேன் என்று சொல்கிறார் அடுத்து விஜய், அவங்க அப்பா, சூர்யா எல்லாரும் சாப்பிடும் போது சூர்யா மகாவிடம் சாப்பாடு சூப்பரா இருக்கு என்று சொல்ல..

நான் ஒரு மூணாவது மனுஷியா செஞ்சது தான் என்று சொல்கிறார். பிறகு விஜய் அப்படியெல்லாம் உங்களை யாரும் சொல்ல மாட்டாங்க என்று இதை வைத்து கவிதை சொல்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது..