ஐஸ்வர்யா ஸ்கிப்பிங் விளையாடுவதை பார்த்து சித்ராதேவி, கௌதமை திட்டி தீர்க்கும் குடும்பம் – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

Aaha kalyanam today episode november 17 : இன்றைய எபிசோடில் மகா பவித்ராவிடம் நகை டிசைன் பண்ணி வர காசு எனக்கு ரொம்ப முக்கியம். அதனால நான் தான் இந்த டிசைன் பண்ற விஷயம் சூர்யா சாருக்கு தெரிய கூடாது என கேட்டுக்கொள்கிறார்.. அடுத்து மகா இரவு டிசைன் பண்ணிக் கொண்டிருக்கிறார்.

அப்பொழுது சூர்யா எழுந்து வந்து நடுராத்திரியில் என்ன பண்ணிட்டு இருக்க என்று கேட்க மகா டிசைன் பண்ணி பார்த்துக் கொண்டிருக்கிறேன் என சொல்கிறார் பிறகு சூர்யா அந்த பேப்பரை வாங்கி பார்க்கிறார் அது வெறும் எம்டி பேப்பராக இருக்கிறது உடனே உனக்கெல்லாம் ஸ்ரேயா பண்ற அளவுக்கு டிசைன் வராது நீ எல்லாம் கோலம் போட தான் லாக்கி என்று மகாவை சொல்கிறார்.

சாப்பாட்டில் பல்லி கடந்ததால் அதிர்ச்சியான முத்து.. தப்பு செஞ்சது விஜயா.! திட்டு வாங்குறது மீனாவா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

பிறகு நாளைக்கு ஒரு மீட்டிங் இருக்கு அந்த மீட்டிங்ல ஸ்ரேயாவோட டிசைன காமிச்சி ஓகே பண்ணனும் பஞ்சபூதங்கள் எல்லாம் சேர்த்து வச்சு டிசைன் பண்ணனும் நாளைக்கு ஸ்ரேயா ஓட டிசைன் எப்படி இருக்குன்னு பார்க்கலாம் என சூர்யா சொல்கிறார்.. பிறகு மகா சூர்யா சொன்னது போல் டிசைனை வரைந்து வைத்துள்ளார்  அடுத்த நாள் காலையில் ஐஸ்வர்யா ஸ்கிப்பிங் விளையாடிக் கொண்டிருக்கிறார்.

அதை கௌதமும், சித்ராதேவியும் பார்த்து இத வீட்ல இருக்கிறவங்க பார்த்து ஐஸ்வர்யாவை திட்டனும் என்று யோசிக்கின்றனர் பிறகு பானுமதி பாட்டி, காயத்ரி, மகா எல்லோரும் ஐஸ்வர்யா ஸ்கிப்பிங் விளையாடுவதை பார்த்து வயிற்றில் குழந்தையை வச்சுக்கிட்டு இப்படி யாராவது பண்ணுவாங்களா பெரியவங்க கிட்ட கேட்டு பண்ணனும்னு உனக்கு தெரியாதா என்று திட்டுகின்றனர்.

இறந்து போன அப்பத்தா… ஜெயிலுக்கு போகும் ஜீவானந்தம்.. மாமியாரையே மிரட்டும் ஈஸ்வரி.. பரபரப்பான எதிர்நீச்சல்

உடனே சித்ராதேவி நீ பண்றது ஒண்ணுமே சரியில்ல ஒங்க அப்பா அம்மாவ வர சொல்லி பேசணும் என சொல்வதற்கு சூர்யா அவங்களை எதுக்கு வர சொல்லணும் ஐஸ்வர்யா என்ன சாப்பிடணும் எப்படி இருக்கணும்னு என்று கவனிக்க வேண்டியது சித்ரா தேவி சித்தி கௌதம் ஓட பொறுப்பு நீங்க தான் ஐஸ்வர்யாவை பார்த்துக்கணும் என சொல்கிறார் பிறகு சித்திரா தேவி அவ ஸ்கிப்பிங் விளையாடுவதை பார்த்து அவளை திட்டுவாங்கன்னு பார்த்தா நம்மள குறை சொல்றாங்க என்று நினைக்கிறார்.

அடுத்து விஜய் பிரபா வேலை செய்யும் ரெஸ்டாரண்டிற்கு போய் மேனேஜர் இடம் என்னோட பிரண்டு ஒரு இருபது பேர் உங்களுக்கு வேற வேற இடத்துல இருந்து ஆர்டர் குடுப்பாங்க அந்த எல்லா ஆர்டரையும் நீங்க பிரபாவுக்கு கொடுக்கணும் ஆனா இத நான் தான் செஞ்சேன்னு நீங்க சொல்லக்கூடாது என்று கேட்டுக்கொள்ள மேனேஜரும் சரி என்று பிரபாவுக்கு போன் பண்ணி இருபது ஆர்டர் இருக்கு வா என கூப்பிடுகிறார்.

அடுத்து சூர்யா ஆபிசுக்கு போனதும் பவித்ராவிடம் டிசைனை காண்பிக்க சொல்கிறார்.. அந்த டிசைனை பார்த்துவிட்டு நான் மனசுல நினைச்ச மாதிரியே இருக்கு ஸ்ரேயா கிட்ட நான் பேசணும் போன் பண்ணி கொடு என்று சொல்ல பவித்ரா மகாவுக்கு போன் பண்ணி வேற வழி இல்ல..

சார் உங்க கிட்ட பேசியே ஆகணும் என்று சொல்றாங்க என பவித்ரா போனை சூர்யாவிடம் கொடுக்கிறார்.. பிறகு சூர்யா மகாவிடம் என்னோட மனசுக்குள்ள புகுந்து பார்த்த மாதிரி டிசைன் பண்ணி இருக்கீங்க அவ்வளவு சூப்பரா இருக்கு என்று சொல்ல மகாவும் கொஞ்சம் குரலை மாற்றி நன்றி என்று பேசிக் கொண்டிருக்கிறார். இத்துடன் முடிந்து உள்ளது.