சாப்பாட்டில் பல்லி கடந்ததால் அதிர்ச்சியான முத்து.. தப்பு செஞ்சது விஜயா.! திட்டு வாங்குறது மீனாவா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

Siragadikka Aasai today episode november 17 : இன்றைய எபிசோடில் விஜயாவும், பார்வதியும் ரவியை பார்த்து பேசிக் கொண்டிருக்கின்றனர் அப்பொழுது விஜயா நீ யாரும் இல்லாத மாதிரி ஏன் தனியா இருக்கணும் வீட்டுக்கு வந்துரு என்று சொல்வதும் நான் மட்டும் தனியா வரதா ஸ்ருதி இருக்காலே அம்மா என கேட்பதும் உன் பொண்டாட்டியும் சேர்த்து தான் சொல்ற அவளையும் வீட்டுக்கு அழைச்சிட்டு வா என்று விஜயா கூப்பிடுகிறார்.

பிறகு ரவி இப்ப நான் வீட்டுக்கு வந்தா முத்து என்ன பண்ணுவான்னு தெரியல என சொல்வதும் விஜயா நானும் அவன பத்தி தான் யோசிக்கிறேன் அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் ஒரு நல்ல நாள் பார்த்து முத்து இல்லாத நேரத்துல நான் சொல்றேன் நீ வா என கூப்பிடுகிறார். அடுத்து மீனா பைனான்சியரை பார்த்து பேசுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார் ஆனால்  பைனான்சியர் மீனாவை கூப்பிடவில்லை..

இறந்து போன அப்பத்தா… ஜெயிலுக்கு போகும் ஜீவானந்தம்.. மாமியாரையே மிரட்டும் ஈஸ்வரி.. பரபரப்பான எதிர்நீச்சல்

பிறகு ஆபீஸிலிருந்து பைனான்சியர் வீட்டிற்கு போக வெளியே வரும் பொழுது மீனா உங்கள பாக்க தான் இவ்வளவு நேரம் காத்துக் கொண்டிருந்தேன் என் புருஷன் கார் கிடைக்காம ரொம்ப கஷ்டப்படுறாரு நீங்க தான் அவருக்கு கார் கொடுத்து உதவி பண்ணும் என்று கேட்க உன் புருஷனுக்கெல்லாம் கார் கொடுக்க முடியாது அவன் கஷ்டப்படட்டும் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

பிறகு அந்த ஆபீஸில் வேலை பார்க்கும் ஒருவர் நீங்க வேணும்னா பைனான்சியர வீட்ல பார்த்து பேசுங்க வீட்ல தான்  அவர் சாந்தமா இருப்பாரு என சொல்கிறார்.. அடுத்து அண்ணாமலை தானாக சாப்பாடு போட்டு சாப்பிட போகிறார் பிறகு முத்து வீட்டிற்கு வந்து அவரும் சாப்பிட சாப்பாடு போடும் பொழுது குழம்பில் பல்லி இருப்பதை பார்த்து அதிர்ச்சியாகி ஓடி வந்து அப்பா சாப்பிடாத சாப்பாட்டுல பல்லி கிடக்கு என அப்பாவுடைய சாப்பாட்டை தட்டி விட்டுள்ளார்.

விஜயின் தாய் மாமன் யார் தெரியுமா.? அட இவரும் சினிமா பிரபலமா..

பிறகு விஜயாவும் பார்வதியும் வீட்டிற்கு வருகின்றனர் முத்து அவர்களிடம் அப்பாவ விட்டுட்டு எங்க தனியா போனீங்க சாப்பாட்ல பல்லி கிடக்கு நல்ல வேலை அப்பா சாப்பிடறதுக்குள்ள நான் வந்து தட்டி விட்டுட்டேன் என்று சொல்கிறார் அதற்கு விஜயா உன் பொண்டாட்டி தான் சமைச்சா என சொல்லும் பொழுது மீனாவும் வீட்டிற்கு வந்துள்ளார். பிறகு முத்து மற்றும் விஜயா இரண்டு பேரும் மீனாவை சாப்பாட்டில் பல்லி கிடக்கு எல்லாரையும் கொல்ல பாத்தியா என்று திட்டுகின்றனர்.

பிறகு அண்ணாமலை யாருக்கும் ஒன்னும் ஆகல இல்ல விடுங்க என்று சொல்கிறார் பிறகு பார்வதி விஜயாவிடம் மீனா குழம்ப மூடி வச்சுட்டு தான் போனா, நம்ப ரெண்டு பேரும் சாப்பிடும்போது நீ தான் குழம்ப திறந்து போட்டுட்ட அதுக்கப்புறம் தான் பல்லி விழுந்திருக்கும் தப்பு உன் மேல நீ மீனாவ திட்டுற என்று சொல்ல ஆமா நான் தான் மறந்து போயிட்ட அதுக்காக இப்ப போய் நான் உண்மையவா சொல்ல முடியும் சரி பரவால்ல விடு என்று விஜயா சொல்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.