என்னை நம்பி வந்தவள் மகா அவகிட்ட காசு இருக்கணும் சூர்யா எடுத்த அதிரடி முடிவு – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

Aaha kalyanam today episode November 1 : இன்றைய எபிசோடில் ராஜலட்சுமி மகாவிடம் வந்து என் பையன ஹாஸ்பிடலுக்கு அழைச்சுட்டு போயி ட்ரீட்மென்ட் பண்ண வைத்ததற்கு நன்றி என சொல்கிறார் பிறகு நான் கொஞ்சம் இறங்கி வந்ததால் உன்னை மருமகளா ஏத்துக்கிட்டேன் என்று நினைக்காத என்றும் சொல்லிவிட்டு போகிறார்..

ராஜலட்சுமி இப்படி பேசியதற்கு மகாவின் மாமனார் அவ அப்படிதாம்மா அவ பேசினதை நினைச்சு நீ எதுவும் பெருசா எடுத்துக்காத என்று சொல்ல மகா பரவால்ல விடுங்க மாமா, அத்தை என் புருஷன் மேல எவ்வளவு அக்கறை வச்சிருக்காங்கன்னு நான் தெரிஞ்சுகிட்டேன் என்று சொல்கிறார் அடுத்து பிரபாவிடம் கோடீஸ்வரி இந்த டீய போய் விஜய் தம்பிக்கு கொடுத்துட்டு வா என்று சொல்ல அவன் என்ன பொண்ணு பாக்கவா வந்திருக்கான்..

உங்க தவிப்பு புரியுது நயன்தாரா மேடம்.! ஆனா தயாரிப்பாளர் நிலைமையை கொஞ்சம் யோசிச்சு பாத்தீங்களா.! கோடி கோடியா கொட்டி கொடுக்கிறோமே..

நான் எல்லாம் போய் கொடுக்க முடியாது என சொல்கிறார் பிரபா, அதற்கு கோடீஸ்வரி விஜய் தம்பி ஹெல்ப் பண்ணலனா நம்ப ஸ்டேஷன்ல தான் இருந்திருக்கணும் போய் ஒழுங்கா டீ குடு என சொல்வதும் பிறகு பிரபா விஜய்க்கு வந்து டீயை கொடுக்கிறார். அடுத்து விஜய்யிடம் நான் என்ன உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்னு எதிர்பாக்குறியா ஒழுங்கா டீ குடிச்சிட்டு வீட்டுக்கு போ என்று சொல்ல விஜயும் கிளம்பிவிட்டார்.

அடுத்து சூர்யா மகா கைல காசு இல்லாம ஹாஸ்பிடல்ல எவ்வளவு கஷ்டப்பட்டா, என்ன நம்பி வந்த பொண்ணு ஆனா அவகிட்ட காசு இருக்கணும் என்று கூட எனக்கு தெரியலை என நினைத்து கொஞ்சம் பணத்தை கையில் வைத்துக் கொண்டு இந்த பணத்தை எப்படியாவது மகா கிட்ட கொடுக்கணும் என நினைக்கிறார்.. அப்பொழுது மகா ரூமிற்கு வந்து என்ன கையில பணத்தோட நிக்கிறீங்க என்று கேட்க உடனே சூர்யா அவங்க சித்தப்பா கிட்ட போனில் பேசுவது போல் நான் கப்போர்ட்டில் பணம் வச்சிருக்கேன்.

விஜய் சினிமா வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை..! அடிமட்டமாக இறங்கி கலாய்க்கும் ப்ளூ சட்டை மாறன்.!

அதை எப்ப வேணும்னா அவசரத்துக்கு எடுத்துக்கலாம் அதற்கான கணக்கு சொல்ல வேண்டியதில்லை என மகாவுக்கு புரிய வேண்டும் என போனில் பேசுவது போல் நடிக்கிறார் இதை பார்த்த சூர்யாவின் சித்தப்பா உள்ளே வந்து என்ன சூர்யா என்று கேட்க நான் உங்ககிட்ட போன்ல பேசல அது ஒன்னு விட்ட சித்தப்பா நான் காலையில அதை பத்தி சொல்றேன் என அவரை வெளியே அனுப்புகிறார்.. அடுத்து கோடிஸ்வரி பிரபாவுக்கு முடியை வளர்த்து சீக்கிரம் கல்யாணத்த பண்ணனும் என தசாதாரணிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

பிறகு கோடீஸ்வரி விஜய்க்கு போன் பண்ணி மகாவிடம் கொடுக்க சொல்லி எப்படிமா இருக்க உனக்கு ஏதாவது பிரச்சனையா என்று கேட்க மகா பிரச்சனை வர இருந்தது எங்க அத்தை என்ன ரொம்ப திட்டிட்டாங்க ஆனா என் புருஷன் எனக்கு சப்போர்ட் பண்ணி பேசினார் என்று சந்தோஷமாக சொல்கிறார் இதை பார்த்து கோடீஸ்வரியும் சந்தோஷப்படுகிறார் இதோடு இன்றைய எபிசோட் முடிந்துள்ளது.