கர்ப்பமே இல்லாத ஐஸ்வர்யாவிற்கு சீர்வரிசை செய்ய ஆசைப்படும் கோடீஸ்வரி.. வீட்டில் நடக்கும் பிரச்னையை தெரிந்து கொண்ட மகா – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

Aaha kalyanam today episode november 07 : இன்றைய எபிசோடில் கோடீஸ்வரி பிரபாவிடம் ஐஸ்வர்யாவிற்கு  சீர்வரிசை செய்யணும் மாப்பிள்ளைக்கும், ஐஸ்வர்யாவுக்கும் டிரஸ் எடுக்கணும் என்று சொல்ல பிரபா நம்ம கிட்ட காசு ஏது அதெல்லாம் வேணாம்மா என்று சொல்கிறார் ஆனால் கோடீஸ்வரி செய்ய வேண்டியத அந்தந்த நேரத்துல செஞ்சு ஆக வேண்டும் என்று சொல்கிறார்.

பிறகு தசாதரன் பிரபா கோடீஸ்வரி மூன்று பேரும் ஐஸ்வர்யாவுக்கு நலுங்கு வைக்கணும் பணத்துக்கு என்ன பண்றது என யோசித்துக் கொண்டிருக்கின்றனர் அப்பொழுது மகா அம்மாவுக்கு போன் பண்ணி என் போன திரும்ப எங்க அத்தை என்கிட்ட கொடுத்துட்டாங்க இனிமே நான் எப்ப வேணாலும் உங்க கிட்ட பேசலாம் என்று சந்தோஷமாக சொல்கிறார்.

காதுகுத்து ஃபங்ஷனுக்கு வந்த மீனாவை கூப்பிட பயந்துகிட்டு தம்பியை விட்டு கூப்பிட சொன்ன செந்தில் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோட்

அப்பொழுது கோடீஸ்வரி மகாவிடம் ஐஸ்வர்யா கர்ப்பமா இருக்கா இல்ல, அதனால அவளுக்கு ஜடை தச்சு நலுங்குலாம் வைக்கணும் ஐஸ்வர்யாவுக்கும் மாப்பிள்ளைக்கும் டிரஸ் எடுக்கணும் என்று சொல்ல மகா இப்ப எதுக்கு அம்மா அதெல்லாம் தேவையில்லை என்று சொல்கிறார் ஆனால் கோடீஸ்வரி அதெல்லாம் செய்ய வேண்டிய நேரத்துல செய்யணும் அப்பதான் எங்கள கொஞ்சமாவது மதிப்பாங்க..

பணத்துக்கு நான் பார்த்துகிறேன் என்று சொல்கிறார்.. பிறகு மகா ஐஸ்வர்யாவிடம் நீ சொன்ன பொய்யால இப்ப நான் தான் கஷ்டப்படுற அம்மா உனக்கு நலுங்கு வைக்கணும் சீர்வரிசை செய்யனும்னு ட்ரெஸ் எடுக்கணுன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க என்று சொல்ல ஐஸ்வர்யா அதெல்லாம் தேவை இல்லாம செலவு பண்ணிட்டு இருக்க வேணான்னு சொல்லிடு ஏன்னா அவங்க எடுத்துட்டு வர சீப்பான டிரஸ் எல்லாம் நான் போட மாட்டேன் என சொல்கிறார்..

இந்த வார நாமினேஷனில் சிக்கிய 6 பேர்.! சூனியக்காரியினால் அழுகாசிக்கு உயர்ந்த மார்க்கெட்..

இதை கேட்டு மகா பழசலாம் மறந்துட்டு ரொம்ப ஓவரா தான் ஆடுற என்று சொல்ல உன் வேலைய பாத்துட்டு போ நீ ஒன்னும் எனக்கு கிளாஸ் எடுக்க வேண்டாம் என்று ஐஸ்வர்யா சொல்கிறார்.. பிறகு மகா அம்மா கிட்ட நம்ப ஐஸ்வர்யா கர்ப்பமா இல்லை என்கிற விஷயத்தை சொல்லிடலாம் என திரும்பவும்  போன் பண்ணி நீ சொன்னதை நான் ஐஸ்வர்யா கிட்ட சொன்னேன் அவ நெகட்டிவா பேசுறா இதெல்லாம் வேணாமா என்று சொல்ல அவ அப்படி தான் பேசுவா நான் பார்த்துக்கிறேன் என கோடீஸ்வரி சொல்கிறார்.

அப்பொழுது சேட்டு வீட்டிற்கு வந்து தசாதரன் வெளியே வாயா என்று கூப்பிட உடனே கோடீஸ்வரி மகா உடைய போனை கட் பண்ணி விட்டு சேட்டுவிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.. சேட்டு பணத்தை கொடுக்கவில்லை என்றால் இருக்கிற ஜாமம் எல்லாம் வெளியே எடுத்து போட்டுட்டு உங்களை வீட்டை விட்டு துரத்தி விடுவேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

மேலும் வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து பொண்ணுங்க கல்யாணத்தை நடத்துனீங்களே இப்ப திரும்ப பணத்தை கொடுக்க முடியல என்று சொல்ல இன்னொரு பக்கம் கோடீஸ்வரிக்கு மகா போன் பண்ண அந்த போன் தானாக கீழே விழுந்து அட்டென் ஆகிவிட்டது சேட்டு சொன்னதெல்லாம் மகா காதில் வாங்கிக் கொண்டு அம்மா வீட்டு பத்திரத்தை அடமானம் வச்சிருக்காங்களா என்கிட்ட இத பத்தி சொல்லவே இல்லையே என்று யோசிக்கிறார்.

அடுத்து கோடீஸ்வரி பிரபாவிடம் ஒரு லிஸ்ட்டை கொடுத்து இதுல இருக்குறெதெல்லாம் போய் வாங்கிட்டு வந்துரு என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது விஜய் அங்கே மளிகை சாமான் காய்கறி எல்லாம் வாங்கிட்டு வருகிறார் இது ஏன் என்று கேட்க ஒரு கடையில குறைந்த விலைக்கு நல்ல பொருளா கொடுத்தாங்க அதான் அப்படியே இந்த வீட்டுக்கு வாங்கிட்டு வந்துடலாம்னு வாங்கினேன் என்று சொல்ல பிரபா என்ன எங்களுக்கு பிச்சை போடுறியா என்று கேட்கிறார் இதோடு இன்றைய எபிசோடு முடிந்துள்ளது..