அமைதியாக இருந்து காரியத்தை சாதித்த மகா.. ஹாஸ்பிடலில் ஐஸ்வர்யாவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

Aaha Kalyanam today episode January 5 : இன்றைய எபிசோடில் பானுமதி பாட்டி ராஜலட்சுமி இங்க எல்லாரையும் மக்கா கிட்ட பேச கூடாதுன்னு கட்டளை போட்டிருந்தா என்று சொல்ல பிறகு ராகவ் திட்டியதால் ராஜலட்சுமி என்னை மன்னிச்சிருங்க அத்தை உங்களுக்கு ரூல்ஸ் போட்டது என்னோட தப்பு தான் ஆனா மகா மேல எனக்கு இருக்கிற அபிப்பிராயத்தை என்னோட உயிர் இருக்கிற வரையும் மாத்திக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்.

அடுத்து தசாதரன் மகா வந்ததும் சேர்ந்து சாப்பிடலாம் என்று வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார் அப்போது மகா போன் பண்ணி இன்னைக்கு என்னால வர முடியுமான்னு தெரியல அவரோட ஆபீஸ்ல ஒரு வேலை இருக்கு அதை நான் செய்யணும் என்று சொல்ல கோடீஸ்வரியும் தசாதரனும் நீ மாப்பிள்ளை ஆபீஸ்ல வேலை செய்யறது நினைச்சு எங்களுக்கு சந்தோஷம்தான் என்று சொல்கின்றனர்.

அருணுக்கு ஆக்சிடென்ட்டான அனைத்து உண்மைகளையும் வெளியில் கொண்டு வருவேன் கதிரிடம் சவால் விட்ட ஆதிரை.. ஜனனியிடம் மல்லு கட்டும் விசாலாட்சி..

அடுத்து அன்னை தெரசா மாதர் சங்கத்தில் இருந்து கொஞ்சம் பேர் வேதாசலம் வீட்டிற்கு வந்து நாங்க பெண்களுக்கு எங்கு அநியாயம் நடக்குதோ அங்க போய் தட்டிக் கேட்போம், அதே சமயம் பெண்களுக்கு நல்லது நடக்கிற இடத்திலையும் போய் பாராட்டுவோம் என்று சொல்லிவிட்டு மகாவிடம் நீங்க கொஞ்ச நாளைக்கு முன்னாடி பேசுன இன்டர்வியூ டிவியில் பார்த்தோம்..

இவ்வளவு பெரிய கம்பெனியோட எம்டி சூர்யா உங்க கூட சேர்ந்து மண் மிதித்தது ரொம்ப பெரிய விஷயம்.. இதிலிருந்து தெரியுது உங்க கணவரும் உங்க மாமியாரும் உங்களுக்கு எவ்வளவு சப்போர்ட் பண்றாங்கன்னு அதனாலதான் உங்களையும் சூர்யாவையும் கௌரவ படுத்தலாம் என்று ரெண்டு பேரையும் ஒன்றாக நிற்க வைத்து சால்வை அணிவிக்கின்றனர்..

பெருசா கனவு காணும் மீனா, முத்து.. அதிகாலையில் விஜயாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

பிறகு மகா எனக்கும் எங்க வீட்ல என் புருஷனும் மாமியார் ரொம்ப சப்போர்ட் பண்ணுவாங்க இந்த குடும்பமே எனக்கு கோவில் மாதிரி என்று  சொல்லுகிறார். அவர்கள் போனதும் ராஜலட்சுமியை பார்த்து ராகவ் உன் பையன் மண் மிதுச்சத்துக்கு தானே இவ்வளவு பிரச்சனை பண்ணின, இப்ப அதை பாராட்டிட்டு போயிருக்காங்க என்று சொல்கிறார்.. அதற்கும் ராஜலட்சுமி நீங்க வேணும்னா மகாவ தலைல தூக்கி வச்சிட்டு கொண்டாடுங்க என்னால எல்லாம் அப்படி இருக்க முடியாது என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

இதைப் பார்த்து வேதாச்சலம் மகா நீ இந்த குடும்பத்தை கௌரவ படுத்திருக்க உனக்கு என்ன வேணும்னு கேளு என்று கேட்க எனக்கு காசு பணம் நகை மேல எல்லாம் ஆசை இல்லை இந்த குடும்பத்தில் இருக்கிற எல்லோரும் என்கிட்ட பேசணும் அது போதும் தாத்தா என்று சொல்கிறார். அடுத்து விஜய்க்கு அனாமிகா போன் பண்ணி நேற்று உங்களை வந்து பார்த்தது என்னோட தோழி தான் எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்று சொல்லிவிட்டு, உங்களுக்காக உங்க வீட்டுக்கு ஒரு கிஃப்ட் அனுப்பி வச்சிருக்கேன்.

அத பாருங்க அதுல ஒரு குளு இருக்கு அதன் மூலமாக நம்ம நேர்ல சந்திக்கலாம் என்று சொல்கிறார். அடுத்து சித்ராதேவியும் கௌதமும் ஐஸ்வர்யாவை ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டு போய் உள்ளனர் அங்கு டாக்டர் ஒரு எமர்ஜென்சி கேஸ் பார்த்துக் கொண்டிருக்கிறார். அதனால் ஐஸ்வர்யா லேட் ஆகுது வாங்க நம்ம வீட்டுக்கு போகலாம் என்று கூப்பிடுகிறார், அதற்கு கௌதம் உன்ன ஹாஸ்பிடல்ல காமிக்காம வீட்டுக்கு அழைச்சிட்டு போனா நான் திட்டு வாங்குறதுக்கா, நாளைக்குலாம் என்னால லீவ் போட்டு வர முடியாது என சொல்கிறார்..

அப்பொழுது ஐஸ்வர்யாவும் டாக்டர் நம்பல செக் பண்ணா உண்மையை சொல்லிடுவாங்களோ என்ற பதட்டத்தில் உட்கார்ந்து இருக்கிறார் பிறகு டாக்டர் வர ரொம்ப நேரம் ஆவதால் சரி வாங்க வீட்டுக்கு போகலாம் என்று கிளம்பும் பொழுது நர்ஸ் ஒருவர் அவர்களை கூப்பிட்டு டாக்டர் வந்துட்டாங்க உங்கள கூப்பிடுறாங்க வாங்க என்று கூப்பிடுகிறார். ஐஸ்வர்யா அதிர்ச்சியாகி நிற்கிறார் இதோடு இந்த எபிசோடு முடிந்துள்ளது