ராஜலட்சுமியின் பேச்சைக் கேட்டு பொம்மை போல் செயல்படும் குடும்பம்.. கதறும் மகா – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

Aaha Kalyanam today episode January 2 : இன்றைய எபிசோடில் மகா ரோட்டில் நடந்து போய்க் கொண்டிருக்கும் போது மூன்று ரவுடி பசங்கள் மகாவிடம் வந்து வம்பு இழுத்துக் கொண்டிருக்கின்றனர் அப்பொழுது அந்த பக்கமாக சூர்யா வந்து மகாவை நின்று பார்த்துவிட்டு பிறகு காரை எடுத்துக்கொண்டு ஸ்லோவாக போய்விட்டார்.

சூர்யா போய்விட்டதால் அந்த ரவுடிகள் மீண்டும் மகாவிடம் வந்து வம்பு இழுத்துக் கொண்டிருக்கின்றனர் பிறகு தூரத்தில் போய் சூர்யா காரை நிறுத்திவிட்டு கிட்டே வந்து அந்த ரவுடிகளை அடித்துவிட்டார். பிறகு மகா சூர்யா காரில் வந்து உட்கார்ந்து கொண்டார்.

விஜயகாந்த்-ராவுத்தர் நட்பை படமாக்க போவதாக மகன் பேட்டி.! இவர்களுடைய பிரிவு குறித்து உண்மை தகவல்

இரண்டு பேரும் வந்து கொண்டிருக்கின்றனர் அப்பொழுது மகா அந்த ரவுடிகளிடம் நான் உங்க பொண்டாட்டி இல்லன்னு சொல்றீங்க அப்ப எதுக்கு என்ன காப்பாத்த வந்தீங்க பேசாம போயிருக்க வேண்டியதுதானே என்று கேட்க சூர்யா பதில் சொல்ல முடியாம திணறுகிறார். இன்னொரு பக்கம் வீட்டில் ராஜலக்ஷ்மி மகா வர நேரம் ஆயிடுச்சு அவ வந்ததும் அவ கிட்ட யாரும் பேசக்கூடாது.

அப்படி மீறி பேசினீங்கன்னா நான் என்ன பண்ணுவேன் என்று தெரியாது என சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது ஐஸ்வர்யா அவள் என்னோட தங்கச்சி தான் இருந்தாலும் பெரியவங்க நீங்க எல்லாம் சொல்றீங்க அதனால நான் மகா கிட்ட பேச மாட்டேன் என்று சொல்கிறார் உடனே காயத்ரி ஆமா நீ தங்கச்சியா மகாவ நெனச்சுட்டாலும், இவ்வளவு நாளாவே நீ அவகிட்ட அதிகமா பேச மாட்ட இப்ப மட்டும் பேசவா போற என்று சொல்கிறார்.

விஜயகாந்த் படத்தில் நடிக்க மறுத்த 5 நடிகைகள்.. கேப்டன் சொன்ன உண்மை!

பிறகு சித்ராதேவி சூர்யா மகா கிட்ட பேசிட்டா என்ன பண்றது என்று கேட்க அவன் யாரு, அவன் என்னோட பையன் அவனா மகா கிட்ட பேசவே மாட்டான் என்று ராஜலட்சுமி சொல்லிக் கொண்டிருக்கிறார் அப்போது சூர்யாவும், மகாவும் ஒன்றாக காரில் வீட்டிற்கு வருவதை பார்த்து எல்லோரும் ஷாக் ஆகின்றனர்.

அப்பொழுது மகா பேக்கை காரில் வைத்து விட்டார் அதனால் சூர்யா அந்த பேக்கை எடுத்துக் கொண்டு பின்னாடியே வந்து மீனாட்சி அக்காவை கூப்பிட்டு பேக் கார்லயே வச்சுட்டு வந்துட்டாங்க பெரிய மகாராணினு நினைப்பா என்று மகாவிடம் கொடுக்க சொல்லி அவங்களிடம் கொடுக்கிறார். பிறகு மகா எல்லோருக்கும் டீ காபி போட்டு கொடுக்கிறார்.

ஆனால் யாருமே அதை வாங்கவில்லை மகாவிடமும் பேசவில்லை, பிறகு காயத்ரி பேப்பரில் மகா என்னை மன்னிச்சிரு ராஜலட்சுமி தான் உன்கிட்ட பேச கூடாதுன்னு சொல்லிட்டாங்க அதனால தான் பேச முடியல என்று பேப்பரில் எழுதி மகாவிடம் கொடுக்கிறார் அதை மகா படித்துவிட்டு வருத்தப்படுகிறார் இதோடு இன்றைய எபிசோட் முடிந்துள்ளது.