இவ்வளவு நடந்தும் மீண்டும் அவங்க அம்மா வீட்டுக்கு போன மகா.. சூர்யாவுக்கு வந்த புதிய சிக்கல் – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

Aaha Kalyanam today episode december 29 : இன்றைய எபிசோடில் மகா ராஜலட்சுமி இடம் வந்து அத்தை நேத்து நான் பேசுனது தப்புதான் என்ன மன்னிச்சிடுங்க என்று சொல்ல உன்கிட்ட நான் பேச தயாரா இல்லை நான் இந்த வீட்டு மூத்த மருமகள் என்னோட தகுதி, தராதரம், என்னை எல்லோரும் எப்படி மதிப்பாங்கனு தெரிஞ்சே எல்லாரும் முன்னாடியும்..

என்ன நீ அவமானப்படுத்திட்ட இதை நான் மன்னிக்கவே மாட்டேன் இந்த உலகமே தலைகீழ மாறினாலும் சூர்யாவே உன்னை ஏத்துக்கிட்டாலும் நான் உன்னை என்னைக்குமே ஏத்துக்க மாட்டேன் இப்ப எதுக்கு என்கிட்ட வந்து பேசிட்டு இருக்க என்கிட்ட மன்னிப்பு கேட்க சொல்லி சூர்யா சொன்னானா என்று கேட்க இந்தப் பிரச்சினையை சரி பண்ண தான் நான் பார்க்கிறேன் என்று மகா சொல்கிறார்.

44 வயது ஹீரோவுக்கு அம்மாவாக நடித்த 36 வயது நடிகை..! விஜய் டிவியில் நடக்கும் மானங்கெட்ட பொழப்பு..

பிறகு ராஜலட்சுமி மகாவை ரொம்ப இன்சல் பண்ணி பேசிவிட்டு சென்றுவிட்டார். அடுத்து மகா சூர்யாவிடம் கிருஷ்ணமூர்த்தி சார் கொடுத்த காண்ட்ராக்ட் ரொம்ப பெரிய விஷயம் இதை செஞ்சே ஆகணும் நான் எங்க வீட்டுக்கு போகட்டுமா என்று திரும்ப கேட்க சூர்யா போனில் நான் கொடுத்த வேலைய சரியா முடிக்கணும் ஆனா என் முகத்திலேயே நீ முழிக்காத என்று மகாவிடம் சொல்லுவது போல் ஜாடை பேசுகிறார்.

அடுத்து மகா வேதாச்சலம் மற்றும் பானுமதி இடம் வந்து நான் எங்க வீட்டுக்கு போய் வேலை செஞ்சே ஆகணும், இல்லனா அப்பா அம்மா வீட்டை மீட்க முடியாது என்று சொல்ல ஐஸ்வர்யா இவ்வளவு நடந்ததுக்கு அப்புறமும் நீ அங்க போறேன்னு சொல்ற எனக் கேட்பதற்கு நீ வாய மூடு அப்பா அம்மா இருக்காங்களா செத்தாங்களானு கூட உனக்கு கவலை இல்லை நீயெல்லாம் பேசாத என்று நான் சொல்கிறார்..

சாதனை நாயகன் : விஜயகாந்த் நடிப்பில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படங்கள்.. லிஸ்ட் பெருசா போகுது

அடுத்து பானுமதி உன்ன உங்க வீட்டுக்கு போய் வேலை செய்யணும்னு சொல்ற நிலைமையில நாங்க இல்ல ஏன்னா உங்க அத்தை உனக்கு மாமியாரா இல்ல எனக்கும் மருமகளா இல்ல என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது வேதாச்சலம் நம்ப நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி தந்த பரம்பரையில இருந்துகிட்டு பொறந்த வீட்டுக்கு வந்த பொண்ணு புகுந்த வீட்டுக்கு போக கூட சுதந்திரம் இல்லை என வருத்தப்படுகிறார்.

பிறகு ராஜலட்சுமி மகாவை எதுவும் சொல்லாமல் அமைதியாக இருப்பதால் வேதாச்சலம் மகாவை நீ உங்க வீட்டுக்கு போயிட்டு வாம்மா என்று சொல்கிறார் அடுத்து சூர்யாவிற்கு ஒருவர் போன் பண்ணி நீங்க கொடுத்த டிசைன்ல ஒரு கரெக்ஷன் இருக்கு அதை மகா தான் சரி பண்ணனும் என்று கேட்க சூர்யா அவங்க இன்னைக்கு லீவு நீங்க கரெக்ஷன் சொல்லுங்க..

நான் ரெக்கார்ட் பண்ணி அவங்க கிட்ட சொல்லி மாத்தி தரேன் என்று சொல்லி போனை வைக்கிறார் பிறகு சூர்யா இப்ப என்ன பண்றது என்று பவித்ராவை கூப்பிட்டு அந்த கரச்ஷனை சொல்லி நீ தான் சரி பண்ணி வைக்கணும் என்று சொல்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது..