மகாவை அடிக்க கை ஓங்கிய ராஜலட்சுமி.! அடிக்க உரிமை இல்லை என அம்மாவையே எதிர்த்து நிற்கும் சூர்யா..!

aaha kalyanam : ஆஹா கல்யாணம் சமீபத்திய எபிசோடில் சூர்யா குளித்து கொண்டிருக்கும் பொழுது போன் வருகிறது அப்பொழுது மகா எடுக்கப் போகிறார் உடனே சூர்யா என் போனை எடுத்து வேவு பாக்க பாக்குறியா என திட்டி விடுகிறார் உடனே மகா கோவித்து கொள்கிறார்.

போன் வந்துச்சு ரொம்ப நேரமா அடிச்சு அதனாலதான் எடுக்க வந்தண் ஆனா நீங்க இப்படி நினைச்சுக்கிட்டீங்க என கோபமாக வெளியே செல்கிறார் எங்கே வெளியே சென்று தாத்தாவிடம் கூறி விடுவாரோ என பயத்தில் இருக்கிறார் ஆனால் தாத்தாவின் மெடிக்கல் ரிப்போர்ட் போனில் இருப்பதால் அதை பார்க்க கூடாது என்பதற்காக தான் சூர்யா அப்படி சொன்னார்.

ஆசை ஆசையாய் வளர்த்த மகள்களை இழந்து வாடும் 3 சினிமா பிரபலங்கள்.! கண்ணீரில் மிதக்க வைத்த இளையராஜாவின் மகள்..

இந்த நிலையில் மகா எப்படி இருந்தாலும் சொல்லிடுவா அவளிடம் மன்னிப்பு கேட்டாக வேண்டும் என மகா பின்னாடியே குட்டி போட்ட பூனை போல் ஓடிக் கொண்டிருக்கிறார் அதேபோல் இரவு தூங்கும் பொழுது தாத்தாவிடம் சொல்வது போல் கனவு காணுகிறார்.

உடனே எழுந்து யோகா செய்து கொண்டிருக்கிறார் அப்பொழுது கை இரண்டு மாட்டிக் கொள்கிறது மகாவை எடுத்து விட சொல்கிறார் ஆனால் மகா மன்னிப்பு கேட்டால் எடுத்து விடுகிறேன் என கூறுகிறார். உடனே சூர்யா மன்னிப்பு கேட்பது என்னுடைய அகராதியிலே கிடையாது என்பது போல் பேசுகிறார் அதனால் மகா கையை எடுத்துவிட முடியாது எனக் கூறுகிறார்.

ஒரு வழியாக இரு மனதாக மன்னிப்பு கேட்கிறார் அதேபோல் மகாவும் கையை எடுத்து விடுகிறார். இப்படியே எபிசோட் கொஞ்சம் டல்லாக சென்று கொண்டிருந்தது.

பவதாரணி இறுதி சடங்கில் பாட்டு பாடி அஞ்சலி செலுத்திய இளையராஜாவின் குடும்பத்தினர்!! பார்த்து உருகும் ரசிகர்கள்..

இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது இந்த ப்ரோமோ வீடியோவை மீனாட்சி பணம் கேட்கிறார் அப்பொழுது மகா பணத்தை எடுத்துக் கொண்டு வந்து இந்தாங்க அக்கா பணம் எனக் கொடுக்கிறார் உடனே ராஜலட்சுமி நிறுத்து என கத்துகிறார்.

நீ என்ன இந்த வீட்டு எஜமானியா உன் இஷ்டத்துக்கு பணத்தை எடுத்து கொடுக்கிற என திட்டுகிறார் நான் சாதாரணமாக பணம் கேட்டாங்க கொடுக்க தானே போன இதுல என்ன இருக்கு எனக் மகா எதிர்த்து பேசுகிறார். உடனே அனைவரும் ஒன்று கூடுகிறார்கள் இவ வேணும்னே என்னை அவமானப்படுத்துவதற்காக தான் பணத்தை எடுத்துக் கொடுக்கிறார் என கூறுகிறார்.

அது மட்டும் இல்லாமல் மகா பதிலுக்கு பேச ராஜலட்சுமி அடிக்க கை ஓங்குகிறார் அந்த சமயத்தில் சூர்யா ராஜலட்சுமி கையைப் பிடித்து மகாவை அடிக்க கை ஓங்குகிறார் ஆனால் சூர்யா தடுத்து நிறுத்தி  இந்த வீட்டில் யாருக்கும் மகவை அடிக்க  உரிமை கிடையாது என பேசுகிறார் இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது.