சத்தமே இல்லாமல் சைலண்டாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிரபலம்.. சற்றும் எதிர்பார்க்காத தகவல்

Bigg Boss evicted : எதிர்பாராத விதமாக தற்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு இருக்கும் நிலையில் இது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி 70 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தொடர்ந்து கடுமையான டாஸ்க்குகள் நடைபெற்று வருகிறது.

இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் தற்போது 13 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர். அதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் எலிமினேஷன் நடைபெறவில்லை எனவே இந்த வாரம் இரண்டு அல்லது மூன்று போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவதாக கூறப்படுகிறது.

மீனாவிடம் சண்டை போடும் விஜயா.. ரூம் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த அண்ணாமலை – பரபரப்பான சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

அப்படி இந்த வாரம் நாமினேஷனில் அர்ச்சனா, தினேஷ், கூல் சுரேஷ், விஷ்ணு, அனன்யா ராவ், நிக்சன் ஆகிய ஆறு பேரும் சிக்கி உள்ளார்கள். இவர்களில் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்புடன் இருந்து வரும் நிலையில் அனன்யா ராவ் மற்றும் கூல் சுரேஷ் வெளியேறுவார்கள் என கூறப்பட்டது. அதன்படி தற்பொழுது பிக் பாஸ் வீட்டில் இருந்து மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்ற அனன்யா ராவ் எலிமினேட் ஆகியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்திலேயே எலிமினேட் ஆனவர் தான் அனன்யா. சில வாரங்களுக்கு முன்பு வைல்ட் கார்டில் என்ட்ரி கொடுத்ததன் மூலம் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தார். எனவே இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் சைலண்டாகவே இருந்து வந்தார் ஆனால் இவருடன் வைல்ட் கார்டில் வந்த விஜய் வர்மா தனது ஆட்டத்தை சிறப்பாக விளையாடி வருகிறார் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

ரவீனாவிற்கு சப்போர்ட் செய்ததால் பூர்ணிமாவிடம் சண்டை போடும் சூனியக்காரி.!

இவ்வாறு மீண்டும் மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்ற அனன்யா ராவ் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளாராம். இவ்வாறு இவரைத் தொடர்ந்து இந்த வாரம் யார் யார் வெளியேறப் போகிறார்கள் என்பது சனி, ஞாயிறு கமல் எபிசோடில் தெரியவரும்.