சினிமாவிற்கு வருவதற்கு முன்பு தினக்கூலி வேலை பார்த்த ஆறு நடிகர்கள்.!

தற்போது சினிமாவில் முன்னணி நடிகர்களாக வளம் வந்து கொண்டிருக்கும் ஏராளமான பிரபலங்கள் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பு கூலி வேலை செய்தவர்களும் உள்ளனர். அப்படி கூலி வேலை செய்து தனது விடாமுயற்சியினால் சினிமாவில் டாப் ஹீரோவாக வளர்ந்து கொண்டிருக்கும் டாப் 6 ஹீரோக்கள் குறித்து பார்க்கலாம்.

ஜெயசூர்யா: மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ஜெயசூர்யா சினிமாவிற்கு அறிமுகமாவதற்கு முன்பு மிமிக்கிரி ஆர்டிஸ்ட் ஆக பணியாற்றி வந்துள்ளார். அதன் பிறகு தான் இவர் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

வித்தார்த்: தமிழில் பல நல்ல திரைப்படங்களில் நடித்திருக்கும் வித்தார் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு கூட்டு பட்டறை நாடக குழுக் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இவ்வாறு இதில் பணியாற்றிக் கொண்டே திரைப்படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்பை தேடி உள்ளார்.

மனோஜ்க்கு தரமான பதிலடி கொடுத்த முத்து.! விஜயாவால் சிக்கலில் மாட்டி கொள்ள போகும் ரோகினி..!

யோகி பாபு: காமெடியனாக அறிமுகமாகி ஹீரோ ரேஞ்சுக்கு வளர்ந்திருக்கும் யோகி பாபு சினிமாவிற்கு வருவதற்கு முன்பு நிறைய லேபர் வேலைகளை செய்து வந்துள்ளார். மேலும் லொள்ளு சபா நிகழ்ச்சியின் துணை இயக்குனராக இரண்டு வருடங்களாக பணியாற்றியுள்ளார். அதன் பிறகு தான் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்றுள்ளார் யோகி பாபு.

சூரி: விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கும் சூரி சினிமாவிற்கு வருவதற்கு முன்பு பெயிண்டர் வேலைகளை செய்துள்ளார். இது குறித்து அவரே பேட்டியிலும் தெரிவித்திருந்தார்.

சந்தானம்: காமெடியனாக பிரபலமான சந்தானம் ஹீரோவாக தொடர்ந்து நடித்து வரும் நிலையில் இவர் சினிமாவதற்கு முன்பு நிறைய சின்ன சின்ன வேலைகளை செய்து வந்துள்ளார்.

அடப்பாவி அர்ஜுன், சரஸ்வதி புள்ளதாச்சு பொண்ணுன்னு கூட பாக்காம இப்படி பண்ணிட்டியே டா…! ஏம்மா நீயும் ஒரு பொண்ணு தானே இப்படியா நடந்துப்ப.. பரபரப்பின் உச்சத்தில் தமிழும் சரஸ்வதி..

விஜய் சேதுபதி: டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் விஜய் சேதுபதி சினிமாவில் நடிப்பதற்கு முன்பு நிறைய வேலைகளில் செய்துள்ளார். கடைகள், ஹோட்டல்கள், கூத்துப்பட்டறை மற்றும் வெளிநாடுகள் போய் வேலை செய்தல் என பல கஷ்டங்களுக்கு பிறகு தான் டாப் ஹீரோவாக சினிமாவில் வலம் வருகிறார்.