பிரிந்து போன காதலியை மீண்டும் காட்டி ரசிகர்களை கண்ணீரில் மிதக்க வைத்த 5 திரைப்படங்கள்.! பணத்தால் காதலை இழந்த சூர்யா..

Tamil Movies: பிரிந்துபோன தனது Ex காதலியை மீண்டும் காட்டி ரசிகர்களை கண்ணீர் மழையில் ஆழ்த்திய டாப் நடிகர்களின் 5 திரைப்படங்கள். இவ்வாறு இந்த ஐந்து படங்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதோடு மட்டுமல்லாமல் பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்தது.

சில்லுனு ஒரு காதல்: கல்லூரி காலத்தில் சூர்யா பூமிகாவை காதலித்து வந்திருப்பார் அதன் பிறகு சூர்யாவை அடித்து இவர்களைப் பிரித்து விடுவார்கள். அதன் பிறகு சூர்யா ஜோதிகாவை திருமணம் செய்துக் கொள்வார். திருமணத்திற்கு பிறகு பூமிகா என்ட்ரி கொடுத்து கதி கலங்க வைத்திருப்பார்.

மனோஜ்க்கு தரமான பதிலடி கொடுத்த முத்து.! விஜயாவால் சிக்கலில் மாட்டி கொள்ள போகும் ரோகினி..!

உன்னை நினைத்து: சூர்யா நடித்திருந்த உன்னை நினைத்து திரைப்படத்தில் லைலாவை முதலில் காதலித்திருப்பார் ஆனால் லைலா தனது பெற்றோர்களின் கட்டாயத்தால் சூர்யாவை விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்துக் கொள்வார். அதன் பிறகு காலத்தின் கட்டாயத்தால் சூர்யா தனது எக்ஸ் லவ்வரானா லைலாவை மீண்டும் பார்ப்பார்.

அழகி: பார்த்திபன் நடிப்பில் வெளியான அழகி திரைப்படத்தில் தனது எக்ஸ் லவ்வரை பல வருடங்களுக்குப் பிறகு விதவையாக ரோட்டோரமாக பார்ப்பார். இதனைப் பார்த்தவுடன் கதி கலங்கி போய் நிற்கும் இந்த காட்சிகள் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

விண்ணைத்தாண்டி வருவாயா: சிம்புவும் திரிஷாவும் உருகி உருகி விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் காதலித்து இருப்பார்கள். ஆனால் காலத்தின் கட்டாயத்தால் இருவரும் பிரிந்து விட அதன் பிறகு சிம்பு நீண்ட நாட்கள் கழித்து பாரினில் த்ரிஷாவை மீண்டும் பார்ப்பார்.

அடப்பாவி அர்ஜுன், சரஸ்வதி புள்ளதாச்சு பொண்ணுன்னு கூட பாக்காம இப்படி பண்ணிட்டியே டா…! ஏம்மா நீயும் ஒரு பொண்ணு தானே இப்படியா நடந்துப்ப.. பரபரப்பின் உச்சத்தில் தமிழும் சரஸ்வதி..

96: 96 படத்தில் விஜய் சேதுபதி தனது பள்ளி காலத்தில் காதலித்த த்ரிஷாவை 20 வருடங்கள் கழித்து அவருக்கு திருமணமான பிறகு பார்ப்பார். இவர்கள் இருவரும் ஒரே அறையில் இருந்தும் எதுவுமே செய்ய முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பார்கள்.