கிளைமாக்ஸ் காட்சியில் தாரை தாரையாக கண்ணீர் வர வைத்த 5 படங்கள்.! காதலிக்காக உயிரை விட்ட ஹீரோ

ஒரு சில திரைப்படங்களின் கிளைமாக்ஸ் காட்சி நம்மை மீறி கண்ணீர் வர வைக்கும் அப்படிபட்ட 5 படங்களை பற்றி நாம் விலாவாரியாக பார்ப்போம்..

சீதா ராமன் : துல்கர் சல்மான் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் ஆக்சன் மற்றும் காதல் கலந்த படமாக இருந்ததால் வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக வெற்றி கண்டது இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அடைபட்டுக் கடக்கும் ராமன் எப்படியாவது சீதாவிடம் சென்றடைந்து விட வேண்டும் என நினைக்கிறார். ராமனுக்காக எல்லாத்தையும் விட்டு விட்டு சீதா வர இருப்பாள்.. இந்த நேரத்தில் ராமன் சீதாவுக்காக உருக்கமாக எழுதும் ஒரு கடிதம் பலரையும் அழ வைத்தது.

கத்தி : ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் எமோஷனல் கலந்த கதையாக இருந்ததால் படம் பெரிய ஹிட் அடித்தது. இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி பலரையும் அழ வைத்தது… ஊருக்காக எல்லாத்தையும் செஞ்சிட்டு கடைசியா யாரோ பெத்த புள்ள மாதிரி ரோட்டில் போகும் போது யாரு பெத்த மகனோ என்ற பாடல் வரும் அது பலரையும் கண்கலங்க வைக்கும்..

தமன்னா நடித்தால் நாங்கள் நடிக்க மாட்டோம்.. பின்வாங்கிய பிரபல நடிகைகள்.. உண்மையை உடைத்த ஹீரோ

3 : இந்த படத்தில் தனுஷ் உருகி உருகி ஸ்ருதிஹாசனை காதலித்து திருமணம் செய்து கொள்வார். ஆனால் ஒரு கட்டத்தில் தனுஷுக்கு ஒரு வினோதமான நோய் வரும் அதனால் தான் மனைவியையே கொன்று விடுவோமோ என்ற பயத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் இவரை தனது கழுத்தை அறுத்து செத்துவிடுவார். அந்த சீன் பலரையும் அழ வைத்தது.

பருத்திவீரன் :  இந்த படத்தில் ஆரம்பத்தில் கார்த்தி குடித்துவிட்டு வருபவர்கள் போவர்களை அடித்துக் கொண்டிருப்பார் ஆனால் கார்த்தி மீது பிரியாமணி காதல் கொள்வார் இதை ஒரு கட்டத்தில் கார்த்தியும் புரிந்து கொண்டு இருவரும் காதலித்து வருவார்கள். கிளைமாக்ஸ் காட்சியில் பிரியாமணியை ஒரு கும்பல் கெடுத்துவிடும் அதை மறைக்க பிரியாமணியை கார்த்தியே வெட்டி கொலை பண்ணுவார். இதை ஊர் மக்கள் எல்லாம் சேர்ந்து கார்த்தியை கொன்று விடுவார்கள் இந்த சீன் பலரையும் அழ வைத்தது.

சப்ப விஷயத்துக்கு சண்டை போட்ட பிரதீப் ஆண்டனி.. 10 வருட நட்பு குறித்து பேசிய கவின்

ஷாஜகான் :  இந்தப் படத்தில் விஜய் ஒரு பெண்ணை உருகி உருகி காதலிப்பார் ஆனால் அந்தப் பெண்ணோ விஜயின் பிரண்டை காதலிப்பார் இந்த விஷயம் விஜய்க்கு தெரிய வர கடைசியில் அவங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைத்துவிட்டு ஒரு டயலாக் பேசுவார் உண்மையான காதல் என்றால்  சொல்லு என் உயிரை கூட தருவேன் சொல்லுவார் இந்த சீன் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து இழுத்ததோடு அழ வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.