‘என்னை அறிந்தால்’ படப்பிடிப்பின் பொழுது மக்கள் மத்தியில் கேமரா மேனாக மாறிய அஜித்.! அன்ஸீன் வீடியோ..

Actor Ajith Kumar: என்னை அறிந்தால் படப்பிடிப்பின் பொழுது அஜித் கேமரா மேனாக மாறி புகைப்படங்கள் எடுத்த அன்ஸீன்  வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இதில் அஜித்துடன் இணைந்து திரிஷா, ரெஜினா, அர்ஜுன், ப்ரியா பவானி சங்கர் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

தனது காதலருடன் ரொமான்ஸ் செய்யும் பிரியா பவானி சங்கர்.! வைரலாகும் கியூட் புகைப்படங்கள்..

மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார். இதற்கான படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த ஆண்டின் கோடை விடுமுறை நாட்களை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் அஜித் தனது சினிமா கேரியரில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.

அப்படி கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் தான் என்னை அறிந்தால். இப்படத்தில் அனுஷ்கா, திரிஷா, அருண் விஜய் ஆகியோர்களுடன் இணைந்து நடித்திருந்தனர். அருண் விஜய் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக மிரட்டினார்.

பிக்பாஸ் 7 புகழ் விசித்ராவிற்கு நடந்த கொடுமைகள்.. இதனால் தான் சினிமாவை விட்டு விலகினாரா.?

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படப்பிடிப்பின் பொழுது எடுத்த அன்ஸீன் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் நடிகர் அஜித் பொதுமக்களுக்கு இடையே ரயில்வே ஸ்டேஷனில் கேமரா மேனாக மாறி போட்டோ மற்றும் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறார்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..