லோகேஷுக்கும், விஜய்க்கும் என்ன பிரச்சனை.? ஷூட்டிங்கில் நடந்தது என்ன.? உண்மையை சொன்ன லலித்குமார்

Leo Movie : விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இன்னும் குறைந்த நாட்களே இருப்பதால் லியோ அதிரடியாக புரமோஷன் வேலைகளில் இறங்கி உள்ளது. சில தினங்களுக்கு முன்பு ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை சந்தோஷப்படுத்தியது.

எதிர்பார்த்த அளவிற்கு ட்ரைலர் ஆக்சன், எமோஷனல் என எல்லாமே இருந்தது.  இப்படி இருந்தாலும் சில வதந்திகள் வெளியானது அதாவது லியோ படத்தின் போது விஜய்க்கும், லோகேஷ்கும் இடையே சண்டை அதனால் லியோ படத்தின் பாதி காட்சிகளை இயக்குனர் ரத்தினவேல் தான் எடுத்தார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வந்தன.

‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் அம்மாவாக நடித்து வரும் கோதை இவ்வளவு சிறியவரா.! தீபக்கை விட வயது குறைவு..

இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார்  கூறி உள்ளது என்னவென்றால்.. நடிகர் விஜய்க்கும், இயக்குனர் லோகேஷுக்கும் எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது சூட்டிங் ஸ்பாட்டில் எந்த சண்டையும் கிடையாது அது எல்லாம் சுத்த பொய் என கூறி இருக்கிறார்.

Lalith kumar
Lalith kumar

இவர் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது துபாயில் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி தொடங்க உள்ளது இதில் விஜய் கலந்து கொள்ள மாட்டார். அனிருத், லோகேஷ் மற்றும் லியோ டீம் கலந்து கொள்ளும் என கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் மூன்றாவது சிங்கள் வருகின்ற திங்கள் கிழமை வெளியாகும் என கூறினார்.

லியோ ட்ரெய்லர் கொஞ்சம் ஓரம்போங்க இதோ வந்து விட்டது சிவகார்த்திகேயனின் அயலான் டீசர்..

அந்தப் பாடலில் திரிஷாவும் விஜயும் வரும் ஒரு குடும்ப பாட்டாக இருக்கும் என தெரிவித்தார் நிச்சயம் கர்நாடகாவிலும் படம் ரிலீஸ் ஆகும். படத்தின் வசூல் குறித்து இரண்டாவது நாளில் அறிவிப்போம் எனவும் அவர் கூறியிருக்கிறார் இந்த செய்தி தற்பொழுது தளபதி ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.