யார் இந்த காட்டான் கண்ட இடத்துல பான் பராக் போட்டு துப்புரான்… வில்லன் நடிகரின் வாழ்க்கையை புரட்டி போட்ட விஜயகாந்த்…

vijayakanth help to ponnambalam  : நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் 80 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் இவர் பல முன்னணி நடிகர் உடன் ஜோடி போட்டு நடித்துள்ளார் அது மட்டும் இல்லாமல் இல்லை என்று வருபவர்களுக்கு வாரி வாரி வழங்கும் வள்ளல். ஆனால் திடீரென கடந்த டிசம்பர் 28ஆம் தேதி கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார். இதற்கு பல ரசிகர்கள் சினிமா பிரபலங்கள் பொதுமக்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

கேப்டன் மறைந்த பிறகு அவர் செய்த நல்ல விஷயங்களை பல நடிகர் நடிகைகள் வெளியே கூறி வருகிறார்கள் அந்த வகையில் சமீபத்தில் ப்ளு சட்டை மாறன் நடிகர் பொன்னம்பலம் கூறிய கருத்தை வெளியிட்டுள்ளார். அதாவது விஜயகாந்த் திரைப்படத்தில் ஒரு சண்டைக் காட்சியில் ஹிந்தி வில்லன் ஆக்டர் வரவில்லை சூட்டிங் ரத்து செய்துவிட்டு வெளியே வந்து கொண்டிருந்தார் கேப்டன்.

Vidaamuyarchi : அஜித்தால் மகிழ் திருமேனிக்கு வந்த பிரச்சனை.. சொன்ன தேதியில் படப்பிடிப்பு முடியுமா.?

அப்பொழுது ஒரு ஓரமாக பாண் பராக் போட்டுக் கொண்டு துப்பி கொண்டு இருந்தார் பொன்னம்பலம் அதை பார்த்த விஜயகாந்த் இந்த காட்டன் யாரு இப்படி கண்ட இடத்தில் தூப்பிகிட்டு இருக்கிறான் ஆள் வர்றத கூட பாக்காம இப்படி தூப்பிகிட்டு இருக்கானே என கேட்டுள்ளார் உதவியாளரிடம் அதற்கு அந்த உதவியாளர்  ஹிந்தியில் வில்லனுக்கு டுப் போட வந்த ஆளுதான் இவர் என கூறினார். ஓ அப்படியா அப்ப இவரையே  நடிக்க சொல்லு ஷூட்டிங் ஆரம்பிக்கலாம் என கூறி பொன்னம்பலம் வாழ்க்கையில் ஒளியேற்றியவர் விஜயகாந்த்.

அதன் பிறகு சில மாதங்கள் கழித்து பொன்னம்பலம் தங்கைக்கு திருமணம் வைத்திருந்தார் 19ஆம் தேதி கல்யாணம் 16ஆம் தேதி ஷூட்டிங் ஒன்றில் கலந்து கொண்டார். அப்பொழுது பொன்னம்பலம் தங்கைக்கு திருமணம் வைத்திருந்தார், பொன்னம்பலம் திருமணம் செய்தி எப்படியோ கேப்டன் காதிற்கு செல்ல உடனே கல்யாண செலவுக்கு உதவி ஏதாவது வேணுமா என கேட்டுள்ளார் அதற்கு பொன்னம்பலம் பாதி வேலையை முடித்து விட்டேன் மீதி வேலை இருக்கிறது கொஞ்சம் தான் தேவைப்படுகிறது என கூறியுள்ளார்.

கிளாமராக நடித்து வாய்ப்பை இழந்த டாப் 5 நடிகைகள்.! குழந்தை குட்டியென செட்டில் ஆன கிளாமர் குயின் நமிதா..

அப்பொழுது எங்கள் இருவருக்கும் எடுக்கப்பட வேண்டிய சண்டைக்காட்சி இரண்டு வாரங்களுக்கு மேல் எடுக்க வேண்டியது ஆனால் இயக்குனரிடம் விஜயகாந்த் பேசி 18ஆம் தேதி இரவு அந்த ஷூட்டிங் வைக்க சொன்னார் பகல் முழுவதும் வேறொரு திரைப்படத்தில் நடித்துவிட்டு இரவில் விஜயகாந்த் ஷூட்டிங் இல் கலந்து கொண்டேன் இரவில் என்னுடன் சண்டை போடும் காட்சியில் விஜயகாந்த் நடித்த பின்பு வீட்டிற்கு சென்று குளித்துவிட்டு மண்டபத்திற்கு என்னை வந்து பார்த்தார்.

அப்பொழுது கேப்டன் இந்தா இது உன்னுடைய சம்பள பணம் 50 ஆயிரம் ரூபாய் இருக்கிறது எனக் கூறிக் கொடுத்தார் அன்று அந்த பணம் எவ்வளவு பெரிய பணம் தெரியுமா அதை என்னால் மறக்க முடியாது என பொன்னம்பலம் விஜயகாந்த் பற்றி பெருமையாக கூறியதாக ப்ளூ சட்டை மாறன் தெரிவித்துள்ளார்.