Vidaamuyarchi : அஜித்தால் மகிழ் திருமேனிக்கு வந்த பிரச்சனை.. சொன்ன தேதியில் படப்பிடிப்பு முடியுமா.?

Vidaamuyarchi : ரசிகர்கள் கொண்டாடும் நாயகன் நடிகர் அஜித்குமார். இவர் மகிழ் திருமேனி உடன் முதல் முறையாக கைகோர்த்து “விடாமுயற்சி” படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் மிக பிரம்மாண்ட பொருள் செலவில் படத்தை தயாரிக்க அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

மேலும் படத்தில் அஜித்துடன் இணைந்து அர்ஜுன், பிக்பாஸ் ஆரவ், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். விடாமுயற்சி படம் அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகி வருகிறது. மேலும் அஜித் இதில் இரட்டை வேடத்தில் நடிப்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

கிளாமராக நடித்து வாய்ப்பை இழந்த டாப் 5 நடிகைகள்.! குழந்தை குட்டியென செட்டில் ஆன கிளாமர் குயின் நமிதா..

படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் அஜ்ர்பைஜானில் நடைபெற்று வந்தது சிறு இடைவேளைக்கு பிறகு மீண்டும் ஷூட்டிங் போய் கொண்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படியான நிலையில் விடாமுயற்சி படத்தில் தொடர்ந்து சிக்கல்கள் ஏற்பட்ட வண்ணமே இருக்கிறது ஏற்கனவே பிரபலா ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா..

பாதியில் வெளியேறிய நிலையில் அவருக்கு பதிலாக ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.  விடாமுயற்சி படத்தின் 50%  படப்பிடிப்பு தான் முடிவடைந்துள்ளது பிப்ரவரி இறுதிவரை மட்டுமே அஜித்தை கால்ஷீட் இருப்பதால் மீதி 50 சதவீத படப்பிடிப்பை எடுத்து முடித்தாக வேண்டும் என சூழ்நிலையில் மகிழ் திருமேனி இருக்கிறார்.

சன் பிக்சர்ஸ் கிட்ட மாட்டாத 5 ஹீரோக்கள்.. கெத்து காட்டும் அஜித்

அஜித் லைகா நிறுவனத்திடம் பிப்ரவரி இறுதி வரை தான்.. அதன் பிறகு கால் ஷீட் இல்லை என அடித்து கூறிவிட்டாராம் இதனால் மகிழ் திருமேனிக்கும், அஜித்திற்கும் இடையே சற்று மனகசப்பு ஏற்பட்டு இருப்பதாக ஒரு தகவல் கசிந்து உள்ளது ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.