சீரியல் கல்யாணம் என்றால் இப்படித்தான் இருக்கும்.. பெண் கழுத்தில் யார் தாலி கட்டுவார் தெரியுமா.? பாக்கியலட்சுமி எழில், அமிர்தா திருமண வீடியோ..

தமிழ் சின்னத்திரையில் அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சீரியல்களுக்கென்று பெயர் போன ஒரு தொலைக்காட்சி தான் விஜய் டிவி. விஜய் டிவியும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பல வித்தியாசமான கதையம் சம்முள்ள சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகிறது அந்த வகையில் சில சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று டிஆர்பியில் முன்னணி வகித்து வருகிறது.

அப்படி விஜய் டிவியில் டாப் சீரியலாக ஒளிபரப்பாகி வருவது தான் பாக்கியலட்சுமி இந்த சீரியல் முழுக்க முழுக்க குடும்பத் தலைவனை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் தற்பொழுது இந்த சீரியல் இந்த அளவிற்கு பிரபலமடைவதற்கு முக்கிய காரணம் கோபி தான். இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது எழில் அமிர்தாவிற்கு திருமணம் நடைபெற்ற முடிந்துள்ள நிலையில் அனைவரும் பாக்கியா, எழிலின் மீது மிகவும் கோபத்தில் இருந்து வருகின்றனர். மேலும் எழில் வீட்டை வாங்கி விடுவதாக சவால் விட்டிருந்த நிலையில் கோபி பாக்கியா, எழில் இருவரையும் வீட்டை விட்டு வெளியே அனுப்ப முடிவெடுத்திருக்கிறார்.

baakiya-lakshmi
baakiya-lakshmi

ராமமூர்த்தி எவ்வளவு கூறியும் கோபி கேட்கவில்லை இதனையடுத்து ஈஸ்வரியும் இவர்களுடன் வந்துவிடுவார் என கோபி நினைக்கும் நிலையில் இதனைப் பற்றி கூற ராதிகா அதிர்ச்சி அடைகிறார். இவ்வாறு கடந்த சில நாட்களாக இந்த சீரியலின் திருமண எபிசோடுகள் தான் ஒளிபரப்பாகி வந்தது.

அந்த வகையில் பொதுவாக உண்மையான திருமணத்தில் மாப்பிள்ளை தான் பெண் கழுத்தில் தாலி கட்டுவார் ஆனால் சீரியல்களில் அந்த நடிகை அவருக்கே தாலி கட்டிக் கொள்கிறார் அந்த வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரித்திகா இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார் சீரியல் கல்யாணம் என்றால் இப்படித்தான் இருக்கும்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.