மங்காத்தாவை விட 3 மடங்கு பவர்புல்லான கதையை அஜித்திடம் சொன்ன வெங்கட் பிரபு.? உண்மையை போட்டு உடைத்த பிரபலம்

Ajith : தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் வெங்கட் பிரபு முதலில் சென்னை 600028 என்னும் படத்தை இயக்கிய வெற்றி கண்டார் அதனை தொடர்ந்து  கோவா படமும் பெரிய ஹிட் அடித்தது இப்படி ஓடிக்கொண்டிருந்த வெங்கட் பிரபு அஜித்தை சந்தித்து மங்காத்தா.

கதை சொல்லவே ரொம்ப பிடித்துப் போகவே நடிக்க ஒப்புக்கொண்டாராம். ஆனால் அஜித் வெங்கட் பிரபுவுடன் இணைவதை தெரிந்து கொண்ட பலரும் அவருடன் இணைய வேண்டாம் என வற்புறுத்தி இருக்கிறார்கள் ஆனால் அஜித் வெங்கட் பிரபு மீதும், ஸ்கிரிப்ட் மீதும் ரொம்ப நம்பிக்கை வைத்ததால் மங்காத்தா படம் அதிரடியாக உருவானது.

லியோ விஜய் தங்கை எலிசாவா இது? கவர்ச்சியில் ரசிகர்களை திணறடிக்கும் புகைப்படங்கள்..

படமும் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அஜித் நெகட்டிவ் ஷெடில் நடித்த பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்திருந்தார் மங்காத்தா படம் அஜித் 50 வது படமாக அமைந்திருந்தது. அதன் பிறகு வெங்கட் பிரபு அஜித்தை வைத்து மீண்டும் இயக்க ஒரு சூப்பரான கதையை வைத்திருந்தாராம்..

அந்த கதை மங்கத்தாவை விட பல மடங்கு சிறப்பான கதையாம் ஆனால் மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித்தின் மார்க்கெட் அசுர வளர்ச்சியை எட்டியதால் அடுத்தடுத்த படங்களில் பிசியாக ஓடிக் கொண்டிருந்ததால் வெங்கட் பிரபுவை அவர் சந்திக்கவே இல்லையாம்..

போலீஸ் ஸ்டேஷனில் தர்ம அடி வாங்கிய ரவி, ஸ்ருதி.. கூனி குறுகி நின்ற அண்ணாமலை – சிறகடிக்க ஆசை இன்று எபிசோட்

அப்படியே சந்தித்து கதை சொல்ல தயாராக இருந்தாலும் அஜித் அதில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது அதனால் தான் தற்பொழுது நடிகர் விஜய் வைத்து ஒரு படம் இயக்கும் வேலைகளில் வெங்கட் பிரபு இறங்கி உள்ளதாக பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.