துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்க மறுத்த இரண்டு முன்னணி ஹீரோக்கள்.. கடைசியில் கமீட்டான விக்ரம் – அட இப்படியெல்லாம் நடந்து இருக்கா.?

Dhruva Natchathiram : கௌதம் மேனன் இயக்குனராகவும், நடிகராகவும் தொடர்ந்து வெற்றி நடை கொண்டு வருகிறார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரையிபடம் பெரிய வெற்றியை பதிவு செய்தது தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்ற மறுபக்கம் இயக்குனர் கௌதமேனன் தொடர்ந்து கதை எழுதி நல்ல நல்ல படங்களை கொடுத்து வருகிறார்.

அப்படி பல வருடங்களாக கிடப்பில் கிடக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம் வருகின்ற நவம்பர் 24 ஆம் தேதி பல தடைகளை தாண்டி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் விக்ரம் உடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், ரிது வர்மா, ராதிகா சரத்குமார், சதீஷ், விநாயகன், வம்சி கிருஷ்ணா..

குரு உச்சத்தில் இருந்தால் தான் இதுபோல நடக்கும்.. முரளி நடிக்கவிருந்த 3 படத்தை அலேக்காக தூக்கிய விஜய்.!

மாயா, திவ்யதர்ஷினி என மிகப் பெரிய நட்சத்திர திரைப் பட்டாளமே நடித்து உள்ளது.  துருவ நட்சத்திரம் படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் எமோஷனல் கலந்த படமாக உருவாகி வந்துயுள்ளது. இந்த படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் கௌதம் மேனன் பேட்டி ஒன்றில் துருவ நட்சத்திரம் படம் குறித்து பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது என்னவென்றால்.. துருவ நட்சத்திரம் படத்தின் கதையை முதலில் சூர்யாவிடம் சொன்னேன் ஆனால் அவர் சில காரணங்களால் நிராகரித்து விட்டார் இதனையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இடம் இந்த கதையை சொன்னேன்.

நடைப்பெற்ற டாஸ்க்கில் ஸ்டாரை வென்ற போட்டியாளர்.! வயித்தெரிச்சலில் மாயா..

அவருக்கு கதை பிடித்திருந்தது ஆனால் அவரும் சில காரணங்களால் தவிர்க்கவே கடைசியாக விக்ரம் ஓகே சொல்லி இந்த படத்தை எடுத்து உள்ளோம் என கூறியுள்ளார். படம் அதிரடி ஆக்சன் ஆக உருவாகியுள்ளது நிச்சயம் ரசிர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என கூறி இருக்கிறார்.