பிரசாந்த் இந்த நிலைமைக்கு காரணம் சத்யராஜ் தான்.! பலருக்கும் தெரியாத தகவல்…

Actor Prasanth: என்னதான் வெற்றி திரைப்படங்களை தந்து முன்னணி நடிகராக வலம் வந்தாலும் ஒரு காலகட்டத்தில் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் சமீப காலங்களாக கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருபவர் தான் நடிகர் பிரசாந்த். 90 காலகட்டத்தில் அஜித், விஜய்யாய் ஓவர் டேக் செய்து பல ஹிட் திரைப்படங்களை கொடுத்த பிரசாந்த் ஏராளமான பெண் ரசிகர்களை கவர்ந்தார்.

மேலும் ஆண் அழகன் என அழைக்கப்பட்ட இவர் காதல் கதை அம்சம் உள்ள திரைப்படங்களில் நடித்து இளசுகள் மத்தியில் பிரபலமானார். முக்கியமாக தமிழ்நாடு மட்டும் இல்லாமல் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் அதிக ரசிகர்கள் உருவாகினார். பிரசாந்த் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்திருந்தாலும் இவருடைய தந்தை தியாகராஜனுக்கு சினிமாவில் பிரசாந்த் வருவதற்கு விருப்பமில்லை.

வீடியோ ஆதாரத்தை காட்டி காட்டுக்குள் அழைத்துச் சென்று நம்பர் நடிகையை விடிய விடிய செய்த டிஸ்கஸ்…

இவரை மருத்துவர் ஆக்கி பார்க்க வேண்டும் என்று தான் நினைத்தார் ஆரம்ப காலகட்டத்தில் தியாகராஜனுக்கு இப்படி ஒரு மகன் இருக்கிறார் என்பதே தெரியாமல் இருந்து வந்தது. அந்த அளவிற்கு தியாகராஜன் மிகவும் இளமையாக இருந்தார் அப்படி ஒரு மகன் இருக்கிறார் என்பது எங்களுக்கு தெரியாது என சத்யராஜ் பல பேரிடம் கூறியுள்ளார்.

எனவே இதை நான் அறிந்த பிரதாப் போத்தன் தன் படத்தில் பிரசாந்த் நடிக்க வைக்க தியாகராஜனிடம் கேட்டாராம் ஆனால் அவர் மருத்துவர் படிக்கப் போகிறார் எனக் கூறி மறுத்து உள்ளார். அதன் பிறகு பாலு மகேந்திராவும் கேட்க அவரிடமும் நோ சொல்லி உள்ளனர். பிறகு ராதாபாரதி தியாகராஜனிடம் 12 நாட்கள் மட்டும் நடித்து  கொடுத்துவிட்டு போக சொல்லுங்கள் என்று வற்புறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

Ajith : டான்ஸ் மாஸ்டர்கள் முன்னாடி நான் ஒண்ணுமே இல்ல.. ஜாலி பண்ணிய அஜித்!

அப்படி ‘வைகாசி பொறந்தாச்சு’ என்ற படம் வெளியாகி சூப்பர் ஹிட் பெற்றது. எனவே பிரசாந்த் சினிமா பக்கமே முழுவதுமாக கவனம் செலுத்த ஆரம்பித்தார். பாலு மகேந்திரா தியாகராஜனிடம் வந்து நான் என் படத்தில் நடிக்க கூப்பிடும் பொழுது முடியாது என சொல்லிவிட்டு இப்பொழுது வேற ஒரு படத்தில் மட்டும் சம்மதம் சொல்லி இருக்கிறாய் என கேட்டாராம் எனவே அவருக்காக பிரசாந்த் நடித்த படம் தான் வண்ண வண்ண பூக்கள்.