ஐசியுவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கேப்டன்.! என்ன ஆனது? விஜயகாந்தின் தற்போதைய நிலை..

Vijayakanth: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐசியூவில் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டவரும் நிலையில் பரிசோதனைக்கு சென்று இருப்பதாக தேமுதிக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதாவது உடல்நிலை சீராக இருக்கிறதாம் உறுப்புகளின் செயல்பாட்டை கவனிப்பதற்காக தான் ஐசியூவியில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

ஒரு காலகட்டத்தில் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வந்த விஜயகாந்த் தனக்குத் தேவையானவற்றை சம்பாதித்த பிறகு அளவுக்கு அதிகமாக இருந்ததால் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலில் ஈடுபட தொடங்கினார். அப்படி மக்கள் மத்தியிலும் இவருடைய தேமுதிக கட்சிக்கு நல்ல ஆதரவு கிடைத்தது.

ரோகினிக்கு போன் பண்ணி 50,000 கேட்ட வசீகரன்.. சந்தோஷத்தில் மீனாவை தூக்கிய முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

கண்டிப்பாக விரைவில் முதலமைச்சராகிவிடுவார் என்று எதிர்பார்த்த வந்த நிலையில் உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்டார். பொதுவாக விஜயகாந்த் அனைவருக்கும் உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கக் கூடிய ஒருவர் அவருக்கு இப்படி ஒரு நிலை வந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நடக்கக்கூட முடியாத அளவுக்கு கேப்டன் இருந்து வரும் நிலையில் அவருடைய இரண்டு மகன்களும் மனைவியும் தான் பார்த்துக் கொள்கின்றனர். சமீபத்தில் வெளிநாட்டிற்கு சென்ற பொழுது விஜயகாந்தின் அழகிய புகைப்படங்களை அவருடைய மகன்கள் வெளியிட்டது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்தது.

தமிழுக்கு சமாதி கட்ட விருது விழாவிற்கு வந்த அர்ஜுன்.! குண்டூசி முதல் கோனுசி வரை மறைக்கும் நமச்சி..

இப்படிப்பட்ட நிலையில் திடீரென மருத்துவமனையில் சமீபத்தில் அனுமதிக்கப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் கேப்டன் விஜயகாந்த் நன்றாக இருப்பதாகவும் அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாகவும் உறுப்புகளின் செயல்பாட்டை கூர்ந்து கவனிப்பதற்காக மட்டுமே ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.