அர்ஜுன் செய்த நார வேலையால் தாலியையே கழட்டிய கோதை குடும்பம்.! மீண்டும் குடிசைகே வந்த தமிழ் – தமிழும் சரஸ்வதியும்

Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் சமீபத்திய எபிசோடில் அர்ஜுன் ஆல் வைத்து தமிழ் கம்பெனியை எரித்து விடுகிறார் இதனால் மொத்த கம்பெனிக்கும் நாசமாகிவிட்டது. இதனை எப்படி ஈடுகட்ட முடியும் என அனைவரும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் அந்த சமயத்தில் இன்சூரன்ஸ் கிளைம் பண்ணலாம் என இன்சூரன்ஸ் கம்பெனியை தேடி தமிழ் மற்றும் நமச்சி செல்கிறார்கள் ஆனால் இன்சூரன்ஸ் கம்பெனி காரர்கள் 60% மட்டுமே க்ளைம் பண்ண முடியும் என கூறி விடுகிறார்கள்.

இதனால் மனம் உடைந்த தமிழ் வீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறார் அப்பொழுது அனைவரும் சோகமாக இருக்க கோதை அனைவரையும் மோட்டிவேட் செய்யும் அளவிற்கு எதற்காக இப்படி இடிந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள் கண்டிப்பாக ஏதாவது ஒரு வழி கிடைக்கும் எவ்வளவோ கஷ்டம் வந்தப்ப கூட நாம இதே மாதிரி உட்காரவில்லை எதற்காக இப்படி உக்காந்து இருக்கீங்க என பேசுகிறார்.

நேரம் பார்த்து தமிழுக்கு உதவ துடிக்கும் பிரபலம்.! அண்ணாமலை ரஜினி போல் முன்னேற போகும் தமிழ் – தமிழும் சரஸ்வதியும்.

பிறகு அனைவருக்கும் சாப்பாடு உருண்டை பிடித்துக் கொடுத்து ஆறுதல் கூறிக் கொண்டிருக்கிறார். உடனே தமிழ் உங்க மடியில் படுத்துக் கொள்ளவா என கேட்க ஆனந்த கண்ணீரில்  கோதை மிதக்கிறார். இந்த நிலையில் தற்பொழுது ஒரு புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் தொழிலாளர்களுக்கு சம்பளம் போட வேண்டும் என தமிழ் யோசித்து உடனே பைனான்ஸ்காரரை பார்க்க போகிறார்.

thamizhum saraswathiyum october 10
thamizhum saraswathiyum october 10

ஆனால் பைனான்சியர் இதற்கு மேல் கடன் கொடுக்க முடியாது என கை விரித்து விடுகிறார் இதனால் மனமுடைந்த தமிழ் வீட்டில் வந்து சொல்லிக் கொண்டிருக்கிறார் ஆனால் கோதை எக்காரணத்தை கொண்டும் தொழிலாளிகள் எதற்காகவும் வருந்தக்கூடாது சம்பளம் இல்லாமல் இருக்கக் கூடாது என அனைவரும் கழுத்தில் காதில் மாட்டிருக்கும் அனைத்து நகைகளையும் கொடுத்து தமிழிடம் கொடுக்கிறார்கள்.

அதேபோல் தமிழின் மனைவி சரஸ்வதியும் தன் கழுத்தில் இருக்கும் தாலியவே கழட்டுகிறார் அதுமட்டுமில்லாமல் காது மூக்கு என அனைத்து நகைகளையும் கழட்டி கொடுக்கிறார். கோதையும் தாலியை கழட்டுகிறார். இதற்கு முன்பு எத்தனையோ துன்பங்கள் வந்தாலும் சரஸ்வதி தமிழ் கட்டிய தாலியை கழட்டாமல் செண்டிமெண்டாக பார்த்து வந்தார். ஆனால் இந்த முறை தாலியையும் கழட்டிவிட்டார் தொழிலாளிகளுக்காக.

தமிழ் படிப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக் கொண்டிருந்தார் ஆனால் அர்ஜுன் செய்த நாற வேலையால் மீண்டும் பழைய நிலைமைக்கு வந்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதோ அந்த ப்ரோமோ…