singer-spb

பாடகர் எஸ் பி பி உடன் 52 நாள் இருந்த மருத்துவர் என்ன நடந்தது எனக் கூறும் வீடியோ.!! இதோ உங்களுக்காக.

legend singer spb’s doctor speak about his memories on spb video:பாடகர் எஸ் பி பி அவர்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற பிற மொழிகளிலும் பாடலை பாடியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் குறைந்தபட்சம் 40 ஆயிரத்திற்கும் மேலான பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடகர் எஸ்பிபி அவர்கள் 52 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி மருத்துவ பலனின்றி காலமானார் என்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பெற்று அதிலிருந்து வெளிவந்த பின்னர் மீண்டும் உடல்நிலை சரி இல்லாமல் போனது.

இப்படி இருக்கும்சூழ்நிலையில் இவருக்கு மருத்துவம் பார்த்த தீபக் என்கிற டாக்டர் அவருடனிருந்த நினைவுகளை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது எனது வழக்கமான நேரங்களில் இருந்ததை விட எஸ்பிபி மருத்துவமனையில் இருந்த 52 நாட்கள் வித்தியாசமானவை.

எனக்கு மிகவும் பிடித்தமான பாடகர் உடன் இருந்த நேரங்களை மறக்க முடியாது. அவருடன் தினமும் 4 முதல் 5 மணி நேரம் நான் செலவிடுவேன், எனது கல்லூரி காலங்களில் நான் அவர் பாடலைக் கேட்டு வளர்ந்தவன். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகும் ஸ்பெஷல் பேஷன்ட் போல என்னை நடத்தாதீர்கள் எல்லாரையும் போலவே ட்ரீட் செய்யுங்கள் என கேட்பார்.

அதுமட்டுமல்லாமல் மருத்துவமனையில் இருந்த அனைத்து மருத்துவர்களிடமும் மிகவும் நெருக்கமாக பழகினார் என கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ.

 

spb-Gangai-Amaran (1)

Spb கடைசியா வாடா போடான்னு சந்தோஷமாக வீடியோ காலில் வெங்கட் பிரபு, பிரேம்ஜி மற்றும் கங்கை அமரனுடன் பேசிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.!! இதோ அந்த வீடியோ.

legend spb and his son friendly talk on video call with kangaiamaran, premji, vengatprabhu video: எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் உடல்நலக் குறைவால் இரண்டு நாட்களுக்கு முன்பு காலமானார் என்பது அனைவரும் மனதிலும் இடியாய் விழுந்தது. இது கனவாக இருக்க கூடாதா என இன்னும் ஏங்குபவர்கள் பலர். எஸ்பிபி அவர்கள் பாடல் வரிகளில் வருவது போல வெள்ளை மனம் பிள்ளை குணம் கொண்டவர்.

spb அவர்கள் மிகவும் எளிமையான மனிதர், பாகுபாடின்றி அனைவரிடமும் பழகுபவர், இதுவரை எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காதவர் என மிகவும் உறுதியாகக் கூறலாம் அந்த அளவுக்கு மாமனிதர்.

இவரது இழப்பு உலகம் முழுவதும்  உள்ள அவரது ரசிகர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடல் நம்மை விட்டுப் பிரிந்தாலும் இவரது குரல் காலம் காலமாக தொடரும் என்பது எந்த ஒரு மாற்றமும் இல்லை. இவர் ஒரு அழியா மனிதர். இவர் என்றும் இயங்கும் ஒளியாய் இருப்பார் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை.

spb மற்றும் அவரது மகன் சரண் இருவரும் சில நாட்களுக்கு முன்பு வீடியோ கால் மூலமாக  கங்கை அமரன்,  பிரேம்ஜி, வெங்கட் பிரபு ஆகியோர்களுடன் பேசும்போது மிகவும் இயல்பாக வாடா போடா என அவ்வளவு உரிமையுடன் நட்பாக பேசி விளையாடிய வீடியோ இணையதளத்தில் பரவலாகி வருகிறது.

அந்த வீடியோவை பார்த்து கண்கலங்காத மனிதர்களே கிடையாது. அந்த அளவுக்கு எஸ்பிபி அவர்கள் சிரித்து சந்தோஷமாக பேசியுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

https://youtu.be/jv6AXIQg5og